India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதிய தேசிய கல்விக் கொள்கை சம்பந்தமான பிரச்சனைகள் திமுக- காங்கிரஸ் சட்டமன்றத்தில் நாடகமாடுவதை வன்மையாக கண்டிப்பதாகவும், இதில் காங்கிரஸ் கட்சி கொள்கை முடிவு என்ன என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் மீது உண்மையான பற்று இருந்தால் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை என ஆட்சியாளர்களால் அறிவிக்க முடியுமா என சவால் விடுத்துள்ளார்.
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 29.3.25 சனிக்கிழமை தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது. எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. அனுமதி முற்றிலும் இலவசம். வேலை நாடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் candidate login ல் விவரங்களை பதிவு செய்தல் வேண்டும் மேலும் விவரங்களுக்கு மனுதாரர்கள் 9345261136 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
ஒரு சிலிர்க்க வைக்கும் ஊர் பெயர் தான் எப்போதும் வென்றான். சுமார் 700 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ராஜகம்பள சமூகத்தை சேர்ந்த சோலையப்பன் பாண்டிய மன்னர்களின் போர் வெற்றிக்கு உதவினார். அதனால் பாண்டிய மன்னர் அவரை எப்போதும் வென்றான் சோலையப்பன் என அழைத்தார். அதுவே எப்போதும் வென்றான் என ஊர் பெயராகியது. போர் ஒன்றில் சோலையப்பன் இறந்துவிடவே ராஜகம்பள சமூகத்தினர் அவருக்கு கோவில் கட்டி வழிபடுகின்றனர். ஷேர் it
வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வுகள் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வை 80 மையங்களில் மொத்தம் 6,913 மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர். இதில் இன்று (மார்ச் 13) கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், பாலிடிக்ஸ் சயின்ஸ் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தது. இன்றைய தேர்வில் 6,913 பேரில் 308 பேர் ஆப்சென்ட் ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம் பாஜக பெருங்கோட்ட பாரதிய ஜனதா மண்டல மாநாடு ஓமலூரில் ஏப்ரல் 19ஆம் தேதி முத்து மஹாலில் எதிரில் சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெறுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து பாஜக பெருங்கோட்ட தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று (மார்ச் 13) அதிகபட்சமாக 101.4°F டிகிரி பாரன்ஹீட் வெயில் அளவு பதிவானது. மேலும் பகல் நேரத்தில் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாதத்தில் 2 வது முறையாக வெயில் சதமடித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மாநில அளவிலான மஞ்சப்பை விருது மற்றும் மாவட்ட அளவிலான பசுமை முதன்மையாளர் விருது பெற https://tnpcb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகியுமான அருள் MLA மீது தாக்குதல் நடத்திய திமுகவினரின் வன்முறை போக்கை வன்மையாக கண்டிப்பதாகவும், திமுக ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பில்லை. எதிர்கட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பில்லை. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை காட்டாட்சி நடக்கிறது என H ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: திருமங்கலத்தில் 5 கோடி கடன் பிரச்சனை காரணமாக இரு மகன்களை கொலை செய்து, மருத்துவர் பாலமுருகனும் (52), அவர் மனைவி வழக்கறிஞர் சுமதியும் (47) இன்று காலை குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனர். காவல்துறை விசாரணையில், மருத்துவர் பாலமுருகன் 20க்கும் மேற்பட்ட வங்கிகளில் கடன் வாங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( மார்ச் -13 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.
Sorry, no posts matched your criteria.