Tamilnadu

News March 13, 2025

ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு

image

முகுந்தாயபுரம் பெல் டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (61). இவர், நேற்று (மார்.12) முகுந்தராயபுரம் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 13, 2025

தனியார் பஸ் மோதி இளம்பெண் பலி

image

கச்சிராயபாளையம் அடுத்த மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமா 27, இவர் ஊராட்சியில் கணக்கெடுக்கும் பணி செய்து வந்தார். நேற்று காலை கச்சிராயபாளையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி பைக்கில் செல்லும் பொழுது தனியார் பஸ் பைக் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில்,சம்பவ இடத்திலேயே பிரேமா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றது.

News March 13, 2025

குழந்தைகளுக்கு வைட்டமின் “A” திரவம் முகாம்

image

வைட்டமின் “A” குறைப்பாட்டினால் கண்பார்வை இழப்பு, வளர்ச்சி குறைபாடு, ஏற்படும். இதனை தடுக்கும் விதமாக 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் வருகிற 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை கரூரில் அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வைட்டமின் ஏ ஊட்டச்சத்து திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்யவும்.

News March 13, 2025

கடலூர் புத்தக திருவிழாவை முன்னிட்டு குறும்படம், புகைப்படப் போட்டி

image

கடலூரில் புத்தக திருவிழாவை முன்னிட்டு குறும்படம், மின்பதாகைகள், புகைப்படப் போட்டிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா 22.03.25 முதல் 31.03.25 வரை மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு முதல் மூன்று பரிசுகளாக ரூ.1,000, ரூ.700 ரூ.500 மதிப்பீட்டிலான புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும். SHARE NOW

News March 13, 2025

தீர்த்தமலையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலை தேர்த்திருவிழாவை முன்னிட்டு அரூர் வருவாய் கோட்டத்திற்கு 18.03.2025 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் 29 /03 /2025 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகின்றது இவ்வாறு தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் 11/03/2025 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News March 13, 2025

திருவாரூர் மாவட்ட பருத்தி விவசாயிகள் கவனத்திற்கு

image

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பருத்தி வறட்சியை தாங்கி கொள்ளும். ஆனால் அதிக மழை அல்லது நீர் தேக்கத்தை தாங்காது. எனவே பதிப்புகளில் இருந்து விவசாயிகள் தங்களது பயிர்களை தற்காத்து கொள்ள வயலில் தேங்கி உள்ள நீரை வடிகால் வசதி செய்து வடிய வைக்க வேண்டும். பின்னர் காம்ப்ளக்ஸ் (19:19:19 ) உரம் தெளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு SHARE பண்ணுங்க..

News March 13, 2025

கடந்த ஆண்டில் நாய் கடித்து சேலத்தில் அதிகம் பேர் பலி!

image

கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 4.80 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டனர் என்றும், அதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 6 பேரும், தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் தலா ஒருவரும் என மாநில முழுவதும் 43 பேர் உயிரிழந்தனர் எனவும், இறந்தவர்களில் 22 பேர் தடுப்பூசி முழுமையாக செலுத்தாமல் இருந்ததாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்!

News March 13, 2025

விருதுநகரில் ஆங்கில தேர்வுக்கான பயிற்சி

image

விருதுநகரில் தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சார்ந்த 21-35 வயதிற்குட்பட்டவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியானவர்களுக்கு அயல்நாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். ஆர்வமுள்ளவர்கள் ww.tahdco.com இல் விண்ணப்பிக்கலாம்.

News March 13, 2025

மரியாதை நிமித்தமாக கவர்னரை சந்தித்த முதல்வர்

image

புதுச்சேரி சட்டபேரவை 15 ஆவது சட்டபேரவையின் ஆறாவது கூட்டதொடர் கடந்த 10ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. மூன்றாம் நாள் நேற்று காலை 9.30 மணியளவில் 2025-26 ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி செய்த நிலையில் இன்று மாலை 6 மணி அளவில் கவர்னர் மாளிகையில் கவர்னர் கைலாஷ்நாதனை மரியாதையை நிமித்தமாக சந்தித்து பேசினார். மேலும் கவர்னரக்கு பட்ஜெட் புத்தகத்தையும் முதல்வர் வழங்கினார்.

News March 13, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (12/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – துர்க்கைசாமி (9498183251), திருச்செங்கோடு – தீபா (9443656999) ,வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!