India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர், நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் இலவச கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியம் வழங்கப்படுகிறது. இதனை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பித்து பெறலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்துவரும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, ஆறு விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் – திருச்சி ராக்போர்ட் (12654/ 12653) , எழும்பூர் – மதுரை பாண்டியன் (12638), எழும்பூர் – திருச்சி சோழன் (22675), எழும்பூர் – ராமேஸ்வரம் சேது(22661/ 22662), எழும்பூர் – ராமேஸ்வரம்(16751 / 16752) ஆகிய விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளது.
எர்ணாகுளம்-டாடாநகர் (வண்டி எண் 18190) இடையே திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் எர்ணாகுளத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு திருப்பூருக்கு மதியம் 12.53 மணிக்கு வந்து 12.55 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில், இனி மதியம் 12.13 மணிக்கு வந்து 12.15 மணிக்கு புறப்படும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.
SBI அல்லது வேறு ஏதேனும் வங்கி கணக்கின் செயலி போல் WhatsApp-ல் வரும் apk File களை Click செய்து உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை உள்ளீடு செய்யாதீர்கள். மீறி செய்தால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை இழப்பீர்கள். இது போன்று ஏமாற்றப்பட்டால் 1930 என்ற இலவச எண்ணை அழைக்கவும். www.cybercrime.gov.in என்ற வலைதள முகவரியில் புகாரளிக்கவும். ஏமாறாமல் இருக்க மற்றவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் இன்று மதுரை மாவட்டம் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் 2100 மீட்டர் நீளத்தில் அப்பல்லோ சந்திப்பு மேம்பாலம் கட்டப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து பார்வையிட்டனர். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி, மறைந்த முன்னாள் கவர்னர் பரூக் மரைக்காயரின் பிறந்தநாள் விழா, புதுச்சேரி வைசியால் வீதியிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட கழக கட்டிடத்தில், மாவட்ட கழக அவைத்தலைவர் க.நசீர்முகமது தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அவர்கள் முன்னாள் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சாக்கோட்டை க. அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சந்திர சூடேஸ்வரர் கோயில் ஓசூரில் உள்ள பாறை மலையின் மீது அமைந்துள்ள ஒரு பழமையான சிவன் கோயிலாகும். இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி மற்றும் உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் குழந்தை வரம் வேண்டி இத்தலத்தில் உள்ள வில்வ மரத்தில் தொட்டில் கட்டினால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
தி.மலை மாவட்டம் செய்யாறு அருகே அருள்மிகு தேவபுரீசுவரர், வேதநாதர் கோவில் உள்ளது. இங்கு வந்து வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். தலத்தில் உள்ள நாகலிங்கத்தை அபிஷேகம் செய்தால் திருமண தடை நீங்கும். இத்தலத்தில் உள்ள பனைமரத்தின் பனம்பழங்களை சாப்பிட்டால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.
சென்னை பாரிமுனையில் உள்ள அன்னை காளிகாம்பாள் கோவில் அருகில், மிக குறுகலாக ஒரு பகுதியில் தான் அன்னை நிமிஷாம்பாள் கோயில் அமைந்துள்ளது. தசமி திதியில் இந்த கோவிலுக்கு வந்து நெய் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபடுகிறார்கள். தொடர்ந்து பத்து தசமி திதியில் வந்து வழிபட்டால் 5வது தசமி நிறைவடைவதற்குள்ளாகவே அன்னை பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிவிடுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.