Tamilnadu

News January 20, 2026

தஞ்சை: சொந்த வீடு கட்டும் கனவு நனவாக வேண்டுமா?

image

தஞ்சை மாவட்டம் திருக்கருகாவூரில் கர்ப்பரக்ஷாம்பிகை கோயில் அமைந்துள்ளது. சொந்தமாக புதிய வீடு கட்ட வேண்டும் என்ற கனவு நிறைவேற இக்கோயிலில் அமைந்து அருள்பாலித்து வரும் மூலவரான கர்ப்பரக்ஷாம்பிகைக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்தி மனமுருகி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. சொந்தமாக வீடு கட்ட நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 20, 2026

3 மாத்திரைக்கு தடை விதித்த புதுவை அரசு

image

புதுச்சேரியில், 3 மாத்திரைகள் குறிப்பிட்ட தரத்தில் இல்லாத நிலையில், அவற்றை விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. புதுவை மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அலுவலர் அனந்தகிருஷ்ணன், இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளாா். மேலும் மாத்திரைகளை மருந்து கடைகளில் விற்பனை செய்யக்கூடாது எனவும், மருந்து கடைகளில் உள்ள இருப்புகளின் நிலவரத்தை மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைக்குத் தெரிவிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News January 20, 2026

வேலூர் மக்களே.. இனி அலைய வேண்டாம்!

image

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <>லிங்கில் மேற்கொள்ளலாம்<<>>. மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News January 20, 2026

திருப்பத்தூர் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் தினந்தோறும் சமூகவலைதள பக்கத்தில் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டு வருகிறது. இன்று (ஜன-20) “உங்கள் வாகனங்களை பார்க்கிங் இடத்தில் நிறுத்தப்படும் போது, அந்த வாகனத்தில் உள்ளே மதிப்புமிக்க பொருள்களையோ, பணத்தையோ வைக்க வேண்டாம். அவற்றை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.,” என பதிவிட்டுள்ளனர்.

News January 20, 2026

சேலத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை!

image

சேலத்தில் பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணி காரணமாக கீழ் கண்ட பகுதிகளில் நாளை(ஜன.21) காலை 9 மணி முதல் காலை 5 வரை மின் தடை: தெடாவூர், கெங்கவல்லி, ஆணையம்பட்டி,புனல்வாசல், கிழக்குராஜபாளையம், வீரகனூர்,நடுவலூர், ஓதியத்தூர், பின்னனூர்,லத்துவாடிஎட்டிக்குட்டைமேடு, கோணங்கிபூர்,ஏகாபுரம், பூலாம்பட்டி, எடப்பாடி,இளம்பிள்ளை, சித்தர்கோவில் இடங்கணசாலை,வேம்படித்தாளம்,காக்காபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி

News January 20, 2026

திருச்சியில் திமுக மாநில மாநாடு- அறிவிப்பு

image

திருச்சியில் மார்ச் 8-ம் தேதி திமுக மாநில மாநாடு நடத்த முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மாநாடு “ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற தலைப்பில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்ளும் வகையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 20, 2026

சென்னையில் உள்ள பெற்றோர் கவனத்திற்கு…

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 94450 61913 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். *தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News January 20, 2026

இந்திய தூதருக்கு புதுவை முதல்வா் கடிதம்

image

புதுச்சேரி யூனியன் பிரதேசம் மாஹே பகுதியைச் சோ்ந்த, கப்பல் பொறியாளா் ஈரானில் மாயமானது குறித்து கண்டறிய வலியுறுத்தி, ஈரானுக்கான இந்திய தூதா் ருத்ரா கௌரவ் ஸ்ரேஸ்த்துக்கு, புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளாா். விரைவில் ஈரானில் அவரை கண்டறிந்து, இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று முதல்வா் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

News January 20, 2026

கள்ளக்குறிச்சியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழலாளி வழிகாட்டு மையத்தில் வருகின்ற 23ஆம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது எனவும் இதில் பங்கேற்க <>http://www.tnprivatejobs.tn.gov.in/<<>> என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதனால் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 20, 2026

விஷம் குடித்த பெண்ணை கைப்பற்றிய பெண் காவலர்

image

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று RPF பெண் காவலரான ஜிஷா ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, இளம் பெண் ஒருவர் தனியாக அழுது கொண்டிருப்பதை கவனித்த அவர், பெண்ணிடம் விசாரித்த போது, சமீபத்தில் தனது சகோதரர் உயிரிழந்ததாக கூறிய அந்த பெண், விரக்தியில் விஷம் குடித்ததாக தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர், பணியாளர்கள் உதவியுடன் பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இளம் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது

error: Content is protected !!