India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வெள்ளகோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில் 6வது மாரத்தான் போட்டி வரும் டிசம்பர் 28ஆம் தேதி வெள்ளகோவிலில் நடைபெற உள்ளது. போட்டியில் கலந்துக்கொள்ள விரும்பும் அனைவரும் கீழே உள்ள இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம். https://share.google/1AKm7aVZbH218HHhW என்ற இனையதல முகவரியில் முன்பதிவு செய்யலாம்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (அக்டோபர் -24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

விருதுநகர் தாலுகா மன்னார்குடியில் விவசாய நிலத்தை காட்டுபன்றி சேதப்படுத்துவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஸ்ரீவி – மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் முருகன் உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலர் செல்லமணி, வனவர்கள் கார்த்திக்ராஜா, பெரியசாமி, வனக்காப்பாளர்கள் மாயதுரை, ஜார்ஜ் குட்டி மற்றும் வேட்டை தடுப்பு காவலர் கொண்ட குழுவினர் ஒன்றரை வயது பெண் காட்டுப்பன்றியை இன்று சுட்டுக் கொன்றனர்.

தமிழக அரசு இன்று 17 ஐஏஎஸ் அதிகாரிகளை பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் செய்துள்ளது. அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் வருவாய் அலுவலராக பணிபுரிந்த ராஜலக்ஷ்மி, சிறப்பு நில எடுப்பு வருவாய் அலுவலர் ( நெடுஞ்சாலை துறை ) ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு பதிலாக ஆர் பாலாஜி திருச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பதவியேற்க உள்ளார்.

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (24.10.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்கள் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் அல்லது இணையதளத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, நகராட்சி நிர்வாகம் இணைந்து தருமபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மாபெரும் மருத்துவ முகாம் நாளை அக். 25, (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 17 சிறப்பு பிரிவுகளில் இலவச பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்தார கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது பயிற்சி சேர விருப்பம் உள்ளவர்கள் www.tahdco.comஇணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வலியுறுத்தியுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (24.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு தங்கள் உட்கோட்ட அதிகாரியை, வழங்கப்பட்டுள்ள தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 என்ற எண்ணை டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (DISHA), மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் வை.செல்வராஜ் எம்பி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நாகை மாலி எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.