India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாப்பாக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் வகையில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 18ம் தேதி இரவு போலீசார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது காசி தர்மம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் சேதமடைந்தும், ஒரு கேமிரா காணாமல் போயிருந்தது, விசாரணை நடத்தி அதே பகுதியில் உள்ள 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் 0431-3524200, 83001 13000 என்ற டோல் ஃப்ரீ எண்களில் தொடர்பு கொண்டு குடிநீர் சேவை, தெருவிளக்கு பழுதுகள், திடக்கழிவு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு புகார்களை தெரிவிக்கலாம். இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பாக இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இலவச இரண்டு சக்கர வாகன பழுது நீக்க பயிற்சி அளிக்க உள்ளது. 18-45 வயது வரை உள்ள இளைஞர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். நாளை முதல் வகுப்புகள் தொடங்கும். பயிற்சி முடிந்த பின்பு அரசு சான்றிதழும், தொழில் தொடங்குவதற்கான வங்கி கடன் உதவியும் செய்து தரப்படும். மேலும் 9442247921 தொடர்பு கொள்ளவும். ஷேர் IT
தமிழகத்தில் இருந்து தினமும், 1,000 லாரிகள் வரை வாடகைக்கு இயக்கப் படுகின்றன. அங்கு சரக்கு களை இறக்கி விட்டு, காலி யாக நிற்கும் லாரிகளை, அங்குள்ள சிலர், கடந்த ஆண்டு சதுர்த்தியின்போது சிலைகளை கரைக்க பயன் படுத்தினர். எனவே வரும் ஆக.30 ஆந்திரா, தெலுங்கானாவுக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் லாரிகள், லோடை இறக்கி விட்டு காலி லாரிகளை, அங்கு நிறுத்த வேண்டாம்,” எனமாநில லாரி உரிமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் உள்ள பணியிட எழுத்துத் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது. எனவே இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் https://forms.gle/L5W420Mnu7BKjo9FA Google link மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்து இவ்வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
“உங்களுடன் ஸ்டாலின்” இரண்டாவது கட்ட முகாம் நாளை (ஆகஸ்ட் 22) திருப்பத்தூர் நகராட்சி வார்டுகள் 11, 12, 13, வாணியம்பாடி நகராட்சி வார்டுகள் 16, 17, மற்றும் குரிசிலாப்பட்டு, கோணப்பட்டு, புத்தகரம், சுந்தரம்பள்ளி, சோமலாபுரம், சத்தம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் இந்த முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாக மனு அளிக்கலாம்.
கரூர் நங்கவரத்தை சேர்ந்தவர் ராஜா. இவருக்கும் அவரது உறவினரான முருகானந்ததிற்கும் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை இருந்துள்ளது. இதில் கடந்த மாதம் 28ஆம் தேதி ராஜாவின் அப்பா செல்வராஜை முருகானந்தம் கத்தியால் குத்தியுள்ளார். நங்கவரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது மாவட்ட எஸ்பி பரிந்துரையில் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திண்டுக்கல் 12-வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வாருங்கள் ஓடுவோம், வாசிப்பை நோக்கி என்ற குறிக்கோளுடன் 23-ம் தேதி காலை 06.00 மணிக்கு டட்லி பள்ளி மைதானத்திலிருந்து அங்குவிலாஸ் பள்ளி மைதானம் வரை “விழிப்புணர்வு மாரத்தான்” நடத்தப்படவுள்ளது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 22) ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. காரிமங்கலம் (ஸ்ரீ துளசியம்மாள் திருமண மண்டபம்), காரிமங்கலம் (VPRC கட்டிடம் அனுமந்தபுரம்), கடகத்தூர் (விநாயகா திருமண மண்டபம்), நல்லம்பள்ளி (மானியதானஅள்ளி சமுதாய கூடம்), மொரப்பூர் (சமூகக்கூடம் ஈச்சம்பாடி), பாலக்கோடு (VPRC கட்டிடம், புலிக்கரை) ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படும்.
குன்னூர் சிம்ஸ் பார்க் அருகே உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணி முதல் 12.30 மணி வரை, மின்னு நுகர்வோர் குறைதீர் கூட்டம், செயற்பொறியாளர் சேகர் தலைமையில் நடைபெற உள்ளது. குன்னூர் நகரம் , எடப்பள்ளி, எடக்காடு, கோத்தகிரி நகரம், நெடுகுலா, அரவேணு, உபதலை குந்தா, சேலாஸ் வெஸ்ட் புரூக், ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.