Tamilnadu

News March 9, 2025

சகல தோஷங்களை நீக்கும் ஸ்ரீ அகத்தீஸ்வரர்

image

காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இது சகல தோஷங்களும் பரிகார ஸ்தலமாக விளங்குகின்றது. இது சூரியனின் அம்சத்துடன் திகழும் ஆலயமாக உள்ளது. மேலும் வேலை வாய்ப்பு கிடைக்க பக்தர்கள் இங்கு தரிசனம் செய்கின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் சிகப்புவஸ்திரம், எருக்க இலை, கோதுமை தானியம் கொண்டு வழிபட்டால் வேண்டுவோர்க்கு வேண்டும் அருளை தருகிறார். ஷேர் பண்ணுங்க.

News March 9, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (09/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – அம்பிகா (9498106533), திருச்செங்கோடு – சிவகுமார் (9498176695) ,வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News March 9, 2025

சிவகாசியில் பட்டாசு தொழிலாளி வெட்டி கொலை

image

சிவகாசி முருகன் காலனி சாலையில் உள்ள தனியார் பட்டாசு ஆலை அருகில் இன்று சிவகாமிபுரம் காலனியை சேர்ந்த கருப்பசாமி (30) என்பவர் 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் மனைவியுடன் மாரிமுத்து என்பவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக அவரை சில நாட்களுக்கு முன் கருப்பசாமி கண்டித்த நிலையில் அவர் தலைமையிலான கும்பல் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகம்.

News March 9, 2025

ராணிப்பேட்டையில் விண்ணப்பிக்கலாம்

image

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பேச்சுலர் அல்லது டிப்ளமோ என் டெலி கம்யூனிகேஷன் கல்வித் தகுதி உள்ள ஐந்து வருடங்கள் பணி அனுபவம் உள்ள ஆண்கள் சவுதி அரேபியாவில் பணி செய்ய விருப்பமிருந்தால் அரசு துறை மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள புகைப்படத்தை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News March 9, 2025

சேலம் மாநகரில் இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (09.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். 

News March 9, 2025

மனத்துயரம் நீக்கும் கனககிரீசுவரர்

image

தி.மலை மாவட்டம் தேவிகாபுரம் பகுதியில் பிரசித்திபெற்ற கனககிரீசுவரர் கோவில் உள்ளது. மலை மீது உள்ள இந்த கோவிலில் ஒரே கருவறையில் 2 சிவ லிங்கங்கள் உள்ளது. வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, மனத்துயரம் நீங்க பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறினால், மொட்டை அடித்தல், பொங்கல் வைத்தல் போன்ற நேர்த்தி கடன்களை செய்கின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 9, 2025

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மார்ச் 9) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News March 9, 2025

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 10ஆம் தேதி தொழிற்பழகுநர் பயிற்சி செயற்கை முகாம் நடைபெற உள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர். கூடுதல் தகவல்களைப் பெற விழுப்புரம் தொலைபேசி எண் 04146 290673 / 294 989 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 9, 2025

திருவள்ளூரில் திமுக அவசர செயற்குழு கூட்டம்

image

திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் எதிர்வரும் 12-ம் தேதி புதன்கிழமை திருவள்ளூர் நகரில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நடைபெறும் பொது கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை தொடர்ந்து ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட கழகத்தின் சார்பில் நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்தில் திருவள்ளூர் எம்எல்ஏ ராஜேந்திரன் பங்கேற்றார். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 9, 2025

கல்லல் மாசி மக திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்

image

சிவகங்கை மாவட்டம், கல்லல் க்ஷீ சௌந்திரநாயகி அம்மன் கோவில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு நாளை காலை 6 மணிக்கு மாபெரும் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் கல்லல்-காரைக்குடி சாலையில் நடைபெறவுள்ளது. இதில் பெரியமாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்படும். வெற்றி பெறுகின்ற முதல் 4 சோடி காளைகளுக்கு விழா கமிட்டியார் சார்பில் ரொக்கத் தொகையாக பரிசுகள் வழங்கப்படும்.

error: Content is protected !!