India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தனியார் கல்லூரி கலையரங்கத்தில் வைத்து உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் இன்று (செப்.6) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சட்ட பேரவை தலைவர் அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமை தாங்கினர். இதில் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் இசக்கி பாண்டியன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேற்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற வேலூர் மாவட்டத்தை சார்ந்த தலைமையாசிரியர்கள் & ஆசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி, இன்று (செப் 6) சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் உடன் இருந்தார்.
கடலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், காட்டுமன்னார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சிகளுக்கு தேவையான குப்பை சேகரிக்கும் புதிய வாகனங்களை, தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ சிந்தனை செல்வன், கடலூர் ஆட்சியர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
திருப்பத்தூரில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்கப் பொதுக்குழு கூட்டம் தலைவர் இரானியப்பன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் அரசு பணியாளர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும், நவம்பர் மாத இறுதிக்குள் காலி மது பாட்டல்களை திரும்ப கூறும் அரசாணை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் போடப்பட்டது.
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்படி, கடலூர் மாவட்டம், வடலூர் நகராட்சிக்குட்பட்ட ஐயன் ஏரி புணரமைக்கும் பணியினை வடலூர் நகர மன்ற தலைவர் சு.சிவக்குமார் இன்று (செப்.06) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகராட்சி பொறியாளர் சிவசங்கரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இன்று (06.09.2025) நடைபெற்றது. முகாமில் சபாநாயகர் அப்பாவு மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்தனர். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். தொடர்நது பொதுமக்களிடம் முகாம் குறித்து கேட்டறிந்தனர்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த இளைஞர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட சார்ந்த இளைஞர்கள் இந்த பயிற்சிக்கு https://iei.tahdco.com/gel_reg.php என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார்.
வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி நாளை 7ந் தேதி இரவு நடக்கிறது. இதை முன்னிட்டு மாலை 5.15 மணிக்கு தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு நவநாள் ஜெபம் ஆகியவை நடத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து இரவு புதுவை, கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் தலைமையில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.
கரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் (செப்டம்பர் 9) அன்று “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறுகிறது. அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை வட்டங்களில் நடைபெறும் இம்முகாம்களில் 13 துறைகள் சார்ந்த 43 சேவைகள் வழங்கப்படுகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம், பென்ஷன், மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளிட்ட பலவகை சேவைகள் குறித்த கோரிக்கைகளுக்கு நேரடியாக தீர்வு அளிக்கப்படும்.
சந்திர கிரகணம் நாளை இரவு 9:58 மணிக்கு துவங்கி நாளை மறுநாள் அதிகாலை 1 மணி அளவில் விலகுகிறது. சந்திரன் மறைப்பு 11 மணி அளவில் துவங்கி அதிகபட்சமாக 11:41 மணிக்கு முழுமையாகி 12:22 வரை நிலைத்து நிற்கும் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக விலகி அதிகாலை 1:26 மணிக்கு முழுமை அடையும். இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களாலே பார்த்து மகிழலாம் என மதுரை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.