India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மீனாட்சியம்மன் கோவிலில் வெளிப்புறத்தில் இருக்கக்கூடிய சுவாரசியமான கோவில்களில் ஒன்றுதான் பாதாள குபேரபைரவர் கோவில். இந்த கோவிலின் சன்னதி ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப்படும். அதாவது தினமும் வரக்கூடிய ராகு காலத்தில் மட்டுமே கோவிலின் சன்னதி திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுவது சிறப்பாகும். இது பற்றி உங்களுக்கு தெரியுமா என்பதை கமெண்ட் பண்ணுங்க.தெரியாத உங்க நண்பருக்கு SHARE பண்ணுங்க.
புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்ச்.21ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி அளவில் ஆட்சியர் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. அங்கு விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தெரிந் வ்ப்து கொள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தின் கீழ் 12 மாத இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு 16 நிறுவனங்கள் சுமாா் 1,536 இளைஞா்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.10ம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, டிகிரி மற்றும் ஐடிஐ படித்த 21 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் மாா்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் 22.03.2025 அன்று கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கிராம சபை கூட்டம் ஆனது 23.03.2025 அன்று காலை 11 மணியளவில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வார்டுகளில் சுழற்சி முறையில் நடத்தப்பட வேண்டும் என்று குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், விதை ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். மொத்தம் 24 விதை விற்பனை நிலையங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து ரூ.20,85,970 மதிப்பிலான 44,320 கிலோ விதையை, விற்பனை செய்ய தடை விதித்து, அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பெரிய மலையில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் உள்ளது. இதற்கு சுமார் 1400 படிகள் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும். படி ஏற இயலாத பக்தர்கள், முதியோர்கள் ஆகியோர்களின் வசதிக்காக ரோப் கார் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதை மாதாந்திர பராமரிப்புக்காக வரும் மார்ச் 24 மற்றும் மார்ச் 25 ஆகிய தேதிகளில் இச்சேவை நிறுத்தப்படுகிறது.
உ.பி – பீகாரில் இருந்து சேலம் வழியாக கேரளாவிற்கு இயக்கப்படும் 2 ரயில்கள், கான்பூர் பகுதியில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன்படி, கோராக்பூர்-திருவனந்தபுரம் வடக்கு ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் (12511), வரும் 20, 21, 23, 27, 28, 30, ஏப்ரல் 3, 4, 6, 10, 11, 13, 25, 27ம் தேதிகளில் மாற்றுப்பாதையாக அயோத்தி தாம், மாபெல்ஹாதேவி பிரக்யாராஜ், கான்பூர் வழியாக இயக்கப்படுகிறது.
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு இங்கே <
ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்கள் நாமக்கல்லில் பார்க்க வேண்டிய பிரசித்தி பெற்ற கோயில்கள்.▶️ நாமக்கல் ஆஞ்சநேயர் ▶️ அர்த்தநாரீஸ்வரர் கோயில், (திருச்செங்கோடு)▶️சுவாமி வெங்கடாஜலபதி கோயில் (நைனா மலை) ▶️ அரபாலீஸ்வரர் கோயில் (நாமக்கல்) ▶️ பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் (கபிலர்மலை) ▶️ காளிப்பட்டி கந்தசாமி கோயில் (காளிப்பட்டி) ▶️ கொல்லிமலை எட்டுக்கை அம்மன்
தென்காசி, கடையநல்லூர் சவல் விலை 3வது தெருவை சேர்ந்த முருகன்(35) என்பவர் தனது மனைவியை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது, முருகன் மனைவி செல்வி யாருடனோ அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். அவர் கண்டித்தும் திருமணம் தாண்டிய உறவை மறுத்ததால் முருகன் கொலை செய்ததாக நேற்று(மார்ச் 15) வாக்குமூலம் அளித்ததாக தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.