Tamilnadu

News September 4, 2025

காஞ்சிபுரம்: தீபம் ஏற்றி வழிபட்டால் சிறந்த பலன்

image

ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியம், மதுரமங்கலத்தில், பிரசித்திபெற்ற பழமை வாய்ந்த கமலவல்லி தாயார் சமேத வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது. இது, எம்பார் சுவாமி அவதார தலமாகும். கண்ணில் குறை பாடு உள்ளோர், இந்தக் கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், கண் சம்பந்தமான நோய்கள் குணமடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க.

News September 4, 2025

கள்ளக்குறிச்சியில் பார்க்க வேண்டிய 6 முக்கிய சிவன் கோயில்கள்

image

▶அசகளத்தூர் லோகபாலீஸ்வரர் கோயில்,

▶செல்லம்பட்டு விஸ்வநாதசுவாமி கோயில்,

▶பெருமங்கலம் சுந்தரேஸ்வரர் கோயில்,

▶மகரூர் கைலாசநாதர் கோயில்.

▶தண்டலை சுயம்புநாதீஸ்வரர் கோயில்.

▶ரிஷிவந்தியம் அர்த்த நாரீசுவரர் கோயில்.

இது தவிர வேறு கோயில்கள் இருந்தால் கமெண்ட் செய்து விட்டு மறக்காம ஷேர் பண்ணுங்க

News September 4, 2025

சென்னைக்கு மழை வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், சென்னையில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் வரும் 10ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. வரும் 8ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது

News September 4, 2025

JUST IN: கோவையில் அதிரடி விலை உயர்வு

image

கோவை: சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்ந்துள்ளது. அதன்படி டீ ரூ. 20, காபி ரூ. 26, பிளாக் டீ உள்ளிட்டவை ரூ. 17 என விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படும் என கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். டீ, காபி பிரியர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 4, 2025

சென்னையில் சிங்கப்பூர் திறன் மேம்பாட்டு மையம்

image

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் உடனான சந்திப்புக்கு, பிறகு பிரதமர் மோடி பேசுகையில், சென்னையில் திறன் மேம்பாட்டுக்கான தேசிய சிறப்பு மையத்தை அமைப்பதில் சிங்கப்பூர் ஒத்துழைப்பு அளிக்கும். விண்வெளி அறிவியல் துறை ஒத்துழைப்பில் சிங்கப்பூர் ஒரு புதிய அத்தியாயத்தை சேர்க்கிறது. தற்போதைய பொருளாதார சூழலில் இந்தியா-சிங்கப்பூர் உறவு மிகவும் முக்கியமானது என்றார்.

News September 4, 2025

திருச்சி: மின்வாரியத்தில் வேலை அறிவிப்பு

image

திருச்சி மக்களே! தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளோர் அக்.2-ம் தேதிக்குள் <>இந்த லிங்கை கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

News September 4, 2025

விழுப்புரம்: மதுவிலக்கு பிரிவு போலீசார் 51 பேர் இடமாற்றம்.

image

விழுப்புரம் மாவட்டத்தில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வந்த 51 போலீசாரை இடமாற்றம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, செஞ்சி மதுவிலக்கு பிரிவு ஏட்டு புனிதா விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கும், ஏட்டு கந்தன் தி.வெ.நல்லூர் காவல் நிலையத்திற்கும், திண்டிவனம் மதுவிலக்கு ஏட்டு ஏழுமலை மேல்மலையனூர் காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News September 4, 2025

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..!

image

சிவகங்கை மாவட்டத்தில் நாளை (செப்.5) மிலாடி நபி தினத்தையொட்டி, அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இல்லாத உலர் நாளாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் அரசு சில்லறை மது விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் முழுவதுமாக நாளை ஒரு நாள் மூடிடவும், அரசின் விதிமுறைகளை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அறிவித்துள்ளார்.

News September 4, 2025

தேனி: மின் வாரியத்தில் 1,794 காலியிடங்கள்! உடனே APPLY

image

தேனி மக்களே, தமிழ்நாடு மின் வாரியத்தில் 1,794 கள உதவியாளர் காலிபணியிடங்களை TNPSC அறிவித்துள்ளது. 18 முதல் 32 வயதுக்கு உட்பட்ட ஐடிஐ முடித்தவர்கள்<> இந்த லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.18,800-ரூ.59,900. கடைசி தேதி: 02-10-2025 ஆகும். மின்சாரத்துறையில் அதிக காலியிடங்கள். இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. எல்லோரும் தெரிஞ்சிக்க இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News September 4, 2025

மதுரை: மின் வாரியத்தில் 1,794 காலியிடங்கள்! உடனே APPLY

image

மதுரை மக்களே, தமிழ்நாடு மின் வாரியத்தில் 1,794 கள உதவியாளர் காலிபணியிடங்களை TNPSC அறிவித்துள்ளது. 18 முதல் 32 வயதுக்கு உட்பட்ட ஐடிஐ முடித்தவர்கள் <>இந்த லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.18,800-ரூ.59,900. கடைசி தேதி: 02-10-2025 ஆகும். மின்சாரத்துறையில் அதிக காலியிடங்கள். இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. எல்லோரும் தெரிஞ்சிக்க இந்த தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!