India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் அறிமுக கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பொறுப்பாளர் டி.ஆர்.பி ராஜா, திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது. தேர்தல் முடிந்தவுடன் பிரியாணி போடுவதாக சொல்லியுள்ளார்கள். அதுவும் மட்டன் பிரியாணி சுவையான ஆட்டு பிரியாணி என்றார்.

தமிழகத்தில் இன்று (மார்ச் 22) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்தத் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கலாம், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படலாம். எனவே அதற்கு மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, குமரி, தூத்துக்குட்டி, நெல்லை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று (மார்ச் 22) காலை 10 மணிக்கு நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்தத் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கலாம், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படலாம். எனவே அதற்கு மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடலூரில் பாரதிய ஜனதா கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. பாரதிய ஜனதா கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு கடலூர் மற்றும் காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பாமகவுக்கு சேலம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்ட பாமக நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே சேலத்தில் திமுக, அதிமுக மற்றும் பாமக என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் பூதனூரில் உள்ள அதிமுக மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் வேட்பாளராக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பாபுவை அவரது இல்லத்தில் நேற்று மாலையில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் நேரில் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் மேலும் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நாமக்கல் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த சூரியமூர்த்தி நேற்று இரவு திடீரென மாற்றப்பட்டார். இதனையடுத்து அதே கட்சியை சேர்ந்த மாதேஸ்வரன் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சூரியமூர்த்தி குறித்த வீடியோ வெளியாகி சர்ச்சையானதால் வேட்பாளர் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது

கரூர் மக்களவைத் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வராததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. மக்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கிய நிலையில், கரூர் மக்களவைத் தொகுதிக்கு சுயேச்சை வேட்பாளர் வழக்குரைஞர் நாகராஜன் என்பவர் மட்டும் முதல்நாளில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். 2-ம் நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் முன் அனுமதி எதுவும் பெறாமல் திமுக கட்சிக்கு ஆதரவாக பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 19ம் தேதி எம்எல்ஏ பிரபாகரன், திமுக கட்சி பேச்சாளர் கோவிந்தன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதையடுத்து, அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொண்ட எம்எல்ஏ பிரபாகரன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.