India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களவைத் பொதுத் தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார் உடன் இருந்தனர்.

தென்காசி எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவு படி புளியங்குடியில் கஞ்சா விற்பனை செய்த கார்த்திக்(23), தூத்துக்குடி முத்துகல்யாணி (22), சிந்தாமணிபேரிப்புதூர் கலைச்செல்வன்(19), தென்காசியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அச்சன்புதூர் பீர் முகமது(52), புளியங்குடியில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தாராபுரம் மணிகண்டன்(40) ஆகிய 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் பாலூர் ஊராட்சியில் அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி ரயில்வே கேட் அருகில் கண்டிகை, சிங்கப்பெருமாள் கோவில் செல்லும் சாலையில் உள்ளதால் நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் விபத்து அபாயத்தில் சென்று வருகின்றன. இதுகுறித்து செங்கல்பட்டு சப் கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தி காலை 8 – 10, மாலை 4 – 5.30 மணிவரை கனரக வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர்

ஜோலார்பேட்டை தேமுதிக சார்பில் மாவட்ட கழக பொருளாளர் ஐ.ஆஞ்சி தனது சொந்த செலவில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் சுமார் 1000 பேருக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் பாட்டில்களை பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது, விஜயகாந்தின் சமாதியை பார்க்க வரும் மக்களுக்கு இலவசமாக உணவும் வழங்கப்பட்டது. உடன் தேமுதிக பொருளாளர் க.மகாதேவன், நகர கழக செயலாளர் எழினி ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் வரும் 19ந்தேதி நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் 100 % வாக்குப்பதிவை ஊக்கப்படுத்தும் வகையில் செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள உணவகங்களில் வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு விரல்களில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை காட்டி சாப்பிடும் உணவகங்களில் 5% தள்ளுபடி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.ஆட்சியரின் அறிவிப்பிற்கு மாவட்ட உணவக உரிமையாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்

பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னப்பன் தெரு பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் தலைமையில் வயது முதிர்ந்த வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழி இன்று (03.04.2024) அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உடன் மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

நீலகிரி மாவட்டத்துக்கு கூடுதலாக தேவைப்படும் 240 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இருந்து நேற்று எடுத்து வரப்பட்டது. இவைகள் மாவட்ட கலெக்டரின் கூடுதல் அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இதை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று(ஏப். 3) பார்வையிட்டார்.

முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று காலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்று அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து கோயில் சார்பில் பக்தர்களுக்கு வழங்கப்படும் நீர் மோரை அவர் வழங்கினார்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள பிஆர்ஜி மாதேப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் சென்னை ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். சொந்த ஊருக்கு வந்தவர், கடந்த 24-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றுள்ளார். கடந்த 1-ந் தேதி ஊருக்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்தவர் உள்ளே சென்று பார்த்தபோது 2 லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் திருடு போயுள்ளது.

பெரணமல்லூர் வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் வேளாண்மை துணை அலுவலர் மரியசரிராஜன் , வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தராஜிடம் நேற்று இடுபொருள் விற்றதற்கான பணத்தைக் கேட்டுள்ளார்.
அப்போது மரியசரிராஜனை கோவிந்தராஜ் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பெரணமல்லூர் போலீசார் அளித்த புகாரின் பேரில் கோவிந்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.