India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக கட்டப்பட்டு போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்ட நத்தம் பறக்கும் பாலத்தில் தொடர்ந்து விபத்துகள் நடந்த வண்ணம் இருந்து சில மாதங்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து இருவர் இறந்த சோகமும் நடந்துள்ளதை அடுத்து வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதமாக போக்குவரத்து காவல்துறை மூலம் விபத்து நடக்கும் இடத்தில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது..

கள்ளக்குறிச்சி நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டி தலைவர்களின் திருவுருவச்சிலைக்கு சேதம் ஏற்படாமல் இருக்க வெள்ளை துணிகளை கொண்டு மூடும் வேலை நடைபெற்று வந்தது இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் இருக்கும் அம்பேத்கர் சிலைக்கும் துணிகளால் மூடப்பட்டது.பின்னர் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் துணிகளை எடுக்க உத்தரவிட்டார்.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று தமிழ் பாடப்பிரிவு தேர்வு நடைபெறுகின்றது. இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியின் வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியர் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற தனது நல்வாழ்த்து சமூக வலைதளம் X மூலம் தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் தனி சின்னத்தில் போட்டுயிடுகிறார். நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 5ஆம் தேதி இராமநாதபுரம் வருகிறார். பிரச்சாரத்திற்கு வரும் அண்ணாமலைக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்க பாஜக கூட்டணி கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. அதன்படி கிருஷ்ணகிரி அரசு பள்ளிகளில் மாணவர்கள் உற்சாகமாக தேர்வு எழுத வந்தனர். கிருஷ்ணகிரி தூய பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேர்வு எழுதுவதற்கு முன்பாக கூட்டு பிரார்த்தனையில் மாணவிகள் ஈடுபட்டனர். இதில் பள்ளி ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சிவசாமி வேலுமணி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அவரின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதில் அவரின் பெயரில் ரூ.1.18 கோடி அசையும் சொத்துகளும், ரூ.7.55 கோடி அசையா சொத்துகளும், மனைவி ஆனந்தி பிரபா பேரில் ரூ.14.35 கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளதாக அவர் வேட்பு மனுவில் தாக்கல் செய்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி என 66 தேர்வு மையங்களில் 15,953 மாணவ மாணவிகள் இன்று 10ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். தேர்வு முறைகேடுகளை தடுக்க 100க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் அனைத்து பள்ளிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட தயாராக இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் மணப்பெண் ஒப்பனை அழகு கலை பயிற்சி மார்ச் 26, 27, 28 ஆகிய 3 தினங்களில் நடைபெறுகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 வயது பூர்த்தி அடைந்த ஆர்வம் உள்ள பெண்கள் முன்பதிவு செய்து பங்கு பெற்று பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 8668100181, 7010143022, 9841336033 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (மார்ச் 26) தொடங்கி ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பயிலும் 22,089 மாணவர்கள், 21,181 மாணவிகள் என மொத்தம் 43,270 பேர் தேர்வு எழுத உள்ளனர். சேலம் மாவட்டத்தில் 181 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் வேட்பாளர் பேசிய பொழுது தாய் மற்றும் தந்தை ஆகியோரை இழந்த தனக்கு முன்னாள் அமைச்சர்கள் இரு அப்பாக்களாக உள்ளனர் என பேசிய போது முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மனம் உருகி தேம்பி கண்ணீர் விட்டு அழுதார். இது கட்சியினரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Sorry, no posts matched your criteria.