India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பத்தூர் மாவட்டங்களின் ஆந்திர எல்லையோர பகுதிகள் மற்றும் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலைப் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கோடைகால வெயில் அதிகரித்து வரும் நிலையில் இன்று மாலை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், இடங்கணசாலை பேரூராட்சி இ.காட்டூர் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் 826 பேர் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்து உள்ளனர்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணிப்பதாக அப்பகுதி மக்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறைந்த வாக்குகள் பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடி வ.உ.சி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திர அறையானது கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திண்டிவனம் மரகதாம்பிகை அரசு பள்ளி வாக்கு சாவடி மையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற தேர்தலில் தனது ஜனநாயக கடமையான வாக்குபதிவினை இருமகள்கள் சம்யுக்தா, சஞ்சித்ரா, சங்கமித்ரா ஆகியோருடன் இணைந்து வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார்.அதனை தொடர்ந்து பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், மூன்றாவது முறையாக மிகப்பெரிய வெற்றி பெற்று பிரதமராக மோடி தொடர்வார் என தெரிவித்தார்.

எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் இன்று (ஏப்ரல் 20) விடுத்துள்ள அறிக்கை: மக்களவை தேர்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் எனது தேர்தல் பரப்புரையில் துணை நின்ற அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

நாகை மாவட்டம் வலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட காருக்குடி பகுதியில் வெள்ளை ஆற்றின் குறுக்கே கனக வாகனங்கள் செல்லும் வகையில் பல ஆண்டுகளாக கோரிக்கை மனு அளிக்கப்பட்ட வந்தது. குறிப்பாக நான்கு தலைமுறைக்கு மேலாக இங்குள்ள ஒத்தையடி பாதை அளவிலான பாலத்தை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் தற்பொழுது, புதிய பாலம் எம்எல்ஏ பொது நிதியிலிருந்து பாலம் கட்டுமான பணி துவங்கியுள்ளது.

மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் 2019ல் வாக்குப்பதிவு
73.93% பதிவாகியுள்ளது.2024ல் வாக்குப்பதிவு 70.06% தான் பதிவாகியுள்ளது.சென்ற தேர்தலை விட தற்பொழுது நடந்து முடிந்த தேர்தலில் 3.87% வாக்கு குறைந்துள்ளது.
மயிலாடுதுறை – 69.05%
சீர்காழி – 71.70 %
பூம்புகார் – 71.74 %
திருவிடைமருதூர் – 70.23 %
கும்பகோணம் – 67.98%
பாபநாசம் – 69.60%

கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று தமிழக-கேரள மாநில எல்லைப்பகுதிகளான ஆனைகட்டி, வாளையாறு , வேலந்தாவளம் , மேல்பாவி , முள்ளி,மீனாட்சிபுரம், கோபாலபுரம் நடுப்புணி , ஜமீன்காளியாபுரம் , வடக்காடு உள்பட 12 சோதனைச் சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்பு துறையின் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக திம்பம், ஹசனூர் வன பகுதிக்குள் செல்கிறது. கடந்த சில நாட்களாக வனவிலங்குகள் போதிய உணவும், தண்ணீரும் இன்றி காட்டை விட்டு சாலையோரங்களில் தென்படும் காட்சி அதிகரித்துள்ளது. இந்த சூழலில் விலங்குகளை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுப்பது மற்றும் விலங்குகளுக்கு உணவளிப்பதற்க்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

லாஸ்பேட்டை மகளிர் தொழில்நுட்ப கல்லூரி, மற்றும் மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஸ்ட்ராங் ரூமுக்கு முன்பாக துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் ஸ்ட்ராங் ரூம் மற்றும் 3 அடுக்கு பாதுகாப்பை ஆய்வு செய்தார். இதனையடுத்து, கட்சி முகவர்களுடன் அவர் கூட்டம் நடத்தினார்.
Sorry, no posts matched your criteria.