India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் வெப்பம் 102.2 டிகிரியாகவும், இரவு வெப்பம் 69.8 டிகிரியாகவும் நிலவியது. இனிவரும் ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடனும், மழையற்றும் காணப்படும். பகல் வெப்பம் 105.8 டிகிரியாகவும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செங்கத்தில் நேற்று இரவு இந்தியா கூட்டணியின் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தலைமை தாங்கினார். இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.
ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆம்பூர் பகுதியில் உள்ள பெரிய மசூதியில் நேற்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்களிடம் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்திற்கு ஆதரவாக கடலூர், மஞ்சக்குப்பம் மீன் அங்காடி மற்றும் கடைத்தெரு பகுதிகளில் பொதுமக்களிடம் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேற்று துண்டறிக்கை வழங்கி வாக்கு சேகரித்தனர்.

கொடைக்கானல் எம்.எம்.தெருவில் உள்ள புதா் பகுதிகளில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியதால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதைத் தொடா்ந்து கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறை – மன்னவனூா் செல்லும் வழியில் உள்ள வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது.

திருநெல்வேலி பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக இன்று (ஏப்.6) மற்றும் நாளை (ஏப்.7) என இரு நாட்கள் பாளை சட்டமன்ற தொகுதிகளில் பாளை எம்எல்ஏ அப்துல் வஹாப் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதில் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க எம்எல்ஏ அப்துல் வஹாப் நேற்று (ஏப்.5) இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் மாவட்டங்களுக்கு இடையேயான 16, 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ள ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அணித்தேர்வு ஏப்ரல் 13 அன்று காலை 8 மணிக்கு சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. தேர்வில் பங்கேற்போர் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, விளையாட்டு உபகரணங்களுடன் வரவும் என அதன் செயலாளர் மாரீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அணைக்கட்டு அடுத்த ராஜபுரத்தை சேர்ந்த மணி (26) என்பவர் நேற்று தனது கிராமத்தில் உள்ள சுமார் 100 அடி ஆழம் கொண்ட பொது கிணற்றை சுத்தம் செய்ய இறங்கியபோது கையில் காயம் ஏற்பட்டது. பின்பு அவரால் மேலே வர முடியவில்லை. அவருடைய அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள் அவரை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் .

பார்ட் டைம் எம்பி என்று பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் கிண்டல் செய்கிறார். ஆமாம் நான் இரண்டரை ஆண்டுகள் மட்டும்தான் எம்.பி.யாக பணியாற்றினேன் அதனால் என்னை ஃபுல் டைம் எம்பியாக தேர்ந்து எடுங்கள் என நாகர்கோவில் நடந்த இந்திய கூட்டணி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பேசினார்.

கடலூர் தொகுதியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். இவர் கடலூர் மாவட்டத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் பண்ருட்டியில் இருந்து கடலூருக்கு காரில் வந்த போது தேர்தல் பறக்கும் படை குழுவினர் விஷ்ணு பிரசாத் காரை சோதனை செய்தனர். இந்த சோதனையில் பணம் உள்ளிட்ட பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.