India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகங்கை, மானாமதுரை ஒன்றியம் முத்தநேந்தலில் ரயில்வே கேட் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த மார்ச்.28 ஆம் தேதி மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இந்த கொள்ளை முயற்சி தொடர்பாக டாஸ்மாக் சூப்பர்வைசர் முருகேசன் மானாமதுரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தொடரந்து குற்றவாளிகளை தேடி வந்தநிலையில் நேற்று இதுகுறித்து நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

செல்லியம்மன் கோயில் அருகே உள்ள சாமுவேல் நகர்ப குதியில் பெண்கள் ஆட்டோ மோதியதில் 50 வயது மதிக்கத்தக்க பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு பெண் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலையில் நடந்த இச்சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் வேலூர் சலவன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 9ம் வகுப்பு மாணவி ரயில் மோதி உயிரிழந்தார். திருப்பத்தூரைச் சேர்ந்த அன்பழகனின் மகள் மகாலட்சுமி. விடுமுறைக்கு புட்லூரில் உள்ள தனது சித்தப்பாவின் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்றிரவு பழனி செல்வதற்காக ரயில் ஏற வந்த போது, தண்டவாளத்தைக் கடக்கையில் ரயில் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு மல்வாா்பட்டி சிக்கையகவுண்டனூரைச் சோ்ந்தவா் வெ. வடிவேல் (33). இவர் வேடசந்தூா் பகுதியிலுள்ள தனியாா் நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறாா். இவர் தனது இருசக்கர வாகனத்தில் வேடசந்தூரிலிருந்து தாடிக்கொம்பு நோக்கி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது இரு சக்கர வாகனத்தின் மீது அவ்வழியாக வந்த வேன் மோதியது.இதில் வேனில் பயணித்த தேவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் முதல் சட்டமன்ற உறுப்பினர் A.M.கிருஷ்ணமூர்த்தி நேற்று இயற்கை எய்தினார். அவர் முதன்முதலாக 2001 ஆம் ஆண்டு புதுச்சேரியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டுவரை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மக்களவைத் தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தபால் வாக்கு பதிவு சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதில் 5,486 போலீசார் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் விடுபட்டவர்கள் நாளை கலெக்டர் அலுவலகத்தில் தபால் வாக்கு பதிவு செய்யலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரி பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

தமிழக காவல்துறையில் சுருக்கெழுத்து பணியகத்தில் இளநிலை நிருபர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதுகுறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதில் மொத்தம் 54 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12 ஆம் வகுப்பு மற்றும் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும்படி கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நடுக்காவேரி யூனியன் வங்கி அருகில் பறக்கும் படை அதிகாரி பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்டியூர் நோக்கி வந்த டாட்டா லாரி வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது வாகனத்தை ஓட்டி வந்த நாமக்கல் பரமத்திவேலூர் தாலுகா புதுப்பாளையம், வள்ளியம்பட்டி தனராசு ஆவணங்களுமின்றி ரூ.80,000 எடுத்து வந்தார். அதை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

சென்னையில் மருத்துவக்கல்லூரி மாணவர் ரோகன் என்பவர் மீது நேற்று இரவு துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த கஜராஜ் என்பவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார், அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஈரோட்டில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் – புகா் இரயில் நிலையமான உத்னாவுக்கு நாளை (ஏப்.15) ஒருவழி சிறப்பு இரயில் (எண்: 06099) இயக்கப்படவுள்ளது. ஈரோட்டில் இருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் இரயில் சேலம், பங்காருப்பேட்டை,கிருஷ்ணராஜபுரம், ராய்ச்சூா், சோலாப்பூா், அஹமத்நகா், நந்தூா்பாா் வழியாக, ஏப்ரல் 16 மாலை 4.15 மணிக்கு உத்னா சென்றடையும் என தெற்கு இரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.