India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தலுக்காக பாதுகாப்பு பணி மற்றும் தொடர் வாகன சோதனைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா காவல் நிலையம் , கட்டுப்பாட்டு அறை , வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.

விழுப்புரம் அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நேற்று (மார்ச் 26) தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பழனியிடம் அளித்த மனுவில், வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் 100 மீட்டருக்கு முன் வாகனத்தை நிறுத்த வேண்டும். ஆனால், விசிக வேட்பாளருடன் மனு தாக்கல் செய்ய வந்திருந்த அமைச்சர் பொன்முடி ஆட்சியர் அலுவலகத்திற்குள் காரில் வந்தார். தேர்தல் நடத்தை விதிகளை மீறிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டிருந்தது.

வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுகவில் உள்ள 18 அணிகளை சேர்ந்த அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று (மார்ச் 26) நடந்தது. இந்த கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார்.

கடலூர் துறைமுகம் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக உள்ளது. அது மட்டுமல்லாமல் அந்த நாய்களுக்கு கழுத்து பகுதியில் காயம்போல் (நோய்) ஏற்பட்டு, தான் என்ன செய்கிறோம் என்று அறியாமல் திறந்த வீடு, கோவில், பள்ளிவாசல் மற்றும் குழந்தைகள் பள்ளி என அனைத்து இடங்களிலும் அந்த நாய்கள் சென்று நுழைந்து விடுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் அப்பகுதியினர் பீதி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 26.03.2024 முதல் 08.04.2024 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வினை 92 தேர்வு மையங்களில் 10, 335 மாணவர்களும் 9, 697 மாணவியர்களும் என மொத்தம் 20, 032 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதவுள்ளனர். இத்தேர்வினை எட்டு தேர்வு மையங்களில் தனித்தேர்வர்களாக 417 மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். இத்தேர்வினை எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களில் 334 பேரும் அடங்குவார்கள்

சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ பணிகள் தொடங்க உள்ளன.அதாவது திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மெட்ரோ தொடங்கப்பட உள்ளது. இதில் திருச்சியில் தொடங்கப்பட உள்ள மெட்ரோவில் மேப் வெளியாகி உள்ளது.அறிக்கையில், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகரில் பெருந்திரள் மற்றும் துரித போக்குவரத்திற்கான விரிவான சாத்தியக்கூறு ஆகும்.

வாசுதேவநல்லூர் அருகே கரிவலம்வந்தநல்லூர் உதவி ஆய்வாளர் சுப்புராயலு நேற்று மாலையில் ரோந்து பணியில் இருந்த போது சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த பெரும்பத்தூரை சேர்ந்த வேல்துரை (38) மற்றும் கிழக்குத் தெருவை சேர்ந்த முத்து(45) ஆகிய இருவரை பிடித்து கைது செய்தார்.மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 29 மதுபாட்டில்கள் பணமும் பறிமுதல் செய்தனர்

வடகாடு அருகே புள்ளான்விடுதி
சேர்ந்தவர் கணேசன் இவரது உறவினர் ராஜேந்திரன் மகன் சுதாகர் (34). இவர்கள் இருவருக்கும் இடையே
இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று கணேசனுக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரங்களை சுதாகர் வெட்டியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட கணேசனை, அரிவாளால் சுதாகர் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த கணேசன்
வடகாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்

திருப்பூரில் மக்களவைத் தேர்தல் தொடர்பான இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தா.கிறிஸ்துராஜ் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் மாவட்டத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

திருப்பூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுப்பராயன் மனுவில், கையிருப்பு மற்றும் வங்கியிருப்பு ரொக்கமாக 79 ஆயிரத்து 647 ரூபாய்; மனைவி கையிருப்பாக இரண்டு லட்சத்து 78 ஆயிரத்து 584 ரூபாய் இருப்பதாக தெரிவித்துள்ளார். மனைவி பெயரில் மட்டும், அசையும் சொத்தாக 5.17 லட்சம் ரூபாய்; அசையா சொத்தாக, 95.55 லட்சம் ரூபாய்க்கும், 1.50 லட்சம் அளவுக்கு நகைக்கடனும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.