India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், கடைவீதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல் திறக்க வேண்டும் என சிவசேனா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் குரு ஐயப்பன் கோரிக்கை வைத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே குட்டை மேடு பகுதியில் இன்று காலை தமிழக அரசு அனுமதியின்றி 58 மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த தாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த அம்மாவாசை என்பவரை வெள்ளித்திருப்பூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 58 மதுபாட்டில் மற்றும் விற்பனை செய்த தொகை ரூ. 7 ஆயிரத்து 80 மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று இந்திய நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விதிமுறைகளை அமல்படுத்துவதற்காக செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபம், நகை மற்றும் அடகு வியாபாரம், வணிக வளாகம் உரிமையாளர்கள், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு தேர்தல் விதிமுறைகளை பற்றி அனைத்து உரிமையாளர்களுக்கும் எடுத்துரைத்தார்.

பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் அதிகாரிகள் முன்னிலையில் இன்று நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமை வகித்து உரையாற்றினார்.

ஆரணி அடுத்த கிருஷ்ணாவரம் பகுதியில்
நேற்று முன்விரோதம் காரணமாக நரசிம்மன் கோவிந்தசாமியின் நிலம் அருகே மாடுகளை கொண்டு செல்லும் போது நரசிம்மனுக்கும் கோவிந்தசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நரசிம்மன் தனது மகன்கள் தினேஷ், வேலு சாந்தமூர்த்தி ஆகியோர் சேர்ந்து கோவிந்தசாமியை பலமாக தாக்கி உள்ளனர்.
நேற்று ஆரணி கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விவசாயியை தாக்கிய 4 பேரை தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று (மார்ச் 19) திருநெல்வேலி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட வழக்கறிஞர் கமலநாதன் விருப்ப மனுவை கட்சி மூத்த நிர்வாகிகளிடம் தாக்கல் செய்தார்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 16 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி பொறியியல் பிரிவு பணிப்பார்வையாளர் , இளநிலை வரை தொழில் அலுவலர் நிலையிலான 16 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கயல்விழி ஆத்தூருக்கும் , கீதாலட்சுமி தலைவாசலுக்கும் பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.

இன்று “சேலத்திற்கு வரும் போது பழைய நியாபகங்கள் வருகின்றன; கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது; அம்மனை, காமாட்சியை சக்தி வடிவமாக நாம் வழிபடுகிறோம், தமிழக மக்கள் பெண்களை தெய்வமாகப் பார்க்கிறார்கள்” என்று சேலத்தில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.

திருச்சி தெற்கு மாவட்ட கூத்தைப்பார் முன்னாள் பேரூர் அதிமுக செயலாளர் S.குமார் நேற்று இயற்கை எய்தினார். இச்செய்தி அறிந்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் எம்பியுமான ப.குமார் இன்று நேரில் சென்று உடலுக்கு மாலை அணிவித்து, அவரது குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறினார். உடன் கூத்தைப்பார் பேரூர் செயலாளர் முத்துக்குமார் இருந்தார்.

கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் ரூ.13 லட்சம் செலவில் புதிதாக சோதனை சாவடி கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலந்து கொண்டு புதிய சோதனை சாவடி கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.