India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், மின்னணு ஊடகங்கள், திரையரங்குகள் மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாக விளம்பரங்கள், காணொலிக் காட்சிகளை தேர்தல் துறையிடம் அனுமதி பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் அறிவுறுத்தினார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளராக மாநில அதிமுக மீனவரணி செயலாளர் பசலியான் நசரேத் அறிவிக்கப்பட்டுள்ளார் . இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம்,எம்.எல்.ஏ குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜான் தங்கம் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

வாணியம்பாடியில் எல்ஐசி கிளை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் எல்ஐசி முகவருக்கும் கிளை மேலாளருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் எல்ஐசி முகவர் இருசப்பன் என்பவரை மூக்கு மீது குத்தியதில் ரத்தம் சொட்ட சொட்ட வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டம் இன்று திருவாரூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நாகப்பட்டினம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எஸ் ஜி எம் ரமேஷ் கலந்து கொண்டார். திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர் முன்னாள் தலைவர் ராகவன் மற்றும் மாநில மாவட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில், தேர்தல் பிரசாரம் குறித்து திட்டமிடப்பட்டது.

அதிமுக கூட்டணி கட்சி செயல் வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் விசுவநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக கூட்டணி திண்டுக்கல் மக்களவை தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்கை அறிமுகப்படுத்தினர் கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த ஏ பி முருகானந்தம் சட்டை அணியாமல் உள்பணியன் அணிந்தவாறு வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி சட்டமன்ற தொகுதி, சேலம் தெற்கு ஒன்றியத்தில் எருமாபாளையம் ஊராட்சி, கொண்டலாம்பட்டி ஊராட்சி, வேடகாத்தான் பட்டி ஊராட்சியை சார்ந்த ஒன்றிய நிர்வாகிகளை
இந்தியா கூட்டணி சேலம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் முன்னாள் அமைச்சர், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம் செல்வ கணபதி நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாக்குகளை சேகரித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி பகுதியில் உள்ள கேபிஜே திருமண மண்டபத்தில் இன்று அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து அமைச்சர் ஆர் காந்தி தலைமையில் ஆற்காடு சட்டமன்ற தொகுதி அறிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

வேப்பந்தட்டை வட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் 2024 ஏப்ரல் 19 அன்று நடைபெற இருக்கும் மக்களவை பொது தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், தேர்தல் தொடர்பான புகார்கள் அளிக்கவும் மற்றும் உதவிகள் பெறவும் விளம்பர நோட்டீசை வேப்பந்தட்டை வட்டாட்சியர் மாயகிருஷ்ணன் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர் பிரேமராணி இன்று பொதுமக்களிடம் வழங்கினர்.

குமரி மாவட்டம் ஈத்தாமொழியை அடுத்த பொட்டல் விலக்கு பகுதியை சேர்ந்தவர் சுயம்பு (61) .இவர் நேற்று மாலை தனது பைக்கில் பொருட்கள் வாங்குவதற்காக அத்தி கடைக்கு சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஈத்தாமொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.