Tamilnadu

News March 30, 2024

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர்

image

இராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் மதச் சார்பற்ற இந்திய கூட்டணி சார்பில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகனை ஆதரித்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி நேற்று இரவு உதயசூரியன் சின்னத்தில் பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் உடன் இருந்தார்

News March 30, 2024

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டசிறப்பு பேரவை கூட்டம்

image

துறைமங்கலம் 3ரோடு பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள், தேர்தல் நிதியளிப்பு மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் நடராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். கட்சி நிர்வாக்கள்தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் ரமேஷ் தகவல் வெளியிட்டுள்ளார்.

News March 30, 2024

திருச்சியில் தானியங்கி ஆய்வகம் தொடக்கம்,

image

திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் இந்தியாவின் முதல் தானியங்கி தொழில்நுட்ப தொழில்துறை ஆய்வகம் நேற்று தொடங்கப்பட்டது. இந்திரா கணேசன் கல்வி குழும தலைவர் கணேசன் தலைமையிலும் செயலாளர் ராஜசேகரன் மற்றும் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர், சென்னை பல்கலை கழக துணை வேந்தர் ராஜ் திறந்து வைத்தார். தானியங்கி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்கள் திறன் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

News March 30, 2024

குமரி: அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த இயக்கம்

image

குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜாண்தங்கம் அவர்களை தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் பிரதீஜீன் நேற்று சந்தித்து குமரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவிற்கு தங்கள் ஆதரவினை தெரிவித்தார். மேலும் வேட்பாளர்கள் வெற்றி பெற முழுமூச்சாக செயல்படுவதாகவும் தெரிவித்தார். விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளர் ராணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News March 30, 2024

சென்னை கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

image

சென்னை-கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதுகோவை-சென்னை இடையே சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (எண் 06050) இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் கோவையில் இருந்து வரும் (மார்ச் 31) நாளை இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை வந்தடையும். அதேபோல் சென்னையிலிருந்து சிறப்பு ரயில் (எண் 06049) ஏப்.1ம் தேதி காலை 10.20 மணிக்கு புறப்படும் என தெரிவித்துள்ளனர்.

News March 30, 2024

வேலூரில் அதிமுகவுக்கு வாக்கு சேகரிப்பு

image

நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் அதிமுக கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்த நிலையில், நேற்று மாலை இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட செயலாளர் தலித் குமாருக்கு அதிமுக நகர செயலாளர் ஜே.கே.என்.பழனி சால்வை அணிவித்து வேலூர் மாவட்ட வேட்பாளரை ஆதரிக்கும் வேண்டினர்.  கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்கள் உடன் இருந்தனர். தொடர்ந்து வாக்கு சேகரித்தனர்.

News March 30, 2024

இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரிப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டம் இன்று கீழையூர் கிழக்கு ஒன்றியம் திருப்பூண்டியில் பள்ளிவாசலில் இஸ்லாமிய மக்களிடம் இந்தியா கூட்டனி வேட்பாளர் வை.செல்வராஜ் வாக்கு சேகரித்தார். உடன் கீழையூர் திமுக கழக ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர். திருப்பூண்டி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார்.

News March 30, 2024

சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் முதல்வரை சந்தித்தார்.

image

பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற உள்ள பிரச்சாரத்திற்காக சேலத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் டி.எம். செல்வகணபதி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வகணபதி முதல்வருக்கு பொன்னாடை வழங்கி வரவேற்றார். மேலும் திமுக நிர்வாகிகள் மற்றும் இந்திய கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 30, 2024

கருகல் நோய் தாக்குதலால் மல்லிகை பூ விவசாயிகள் வேதனை

image

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியான கண்ணியப்பிள்ளைபட்டி, பிச்சம்பட்டி,கதிர் நரசிங்கபுரம் போன்ற பகுதிகளில் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் மல்லிகைப் பூக்களில் கருகல் நோய் ஏற்பட்டு பூக்கள் பாதிக்கப்படுவதால் மல்லிகை பூக்களின் வரத்து குறைந்து வருவதால் பூ விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

News March 30, 2024

புதுவை: 20 பேருக்கு வயிற்றுப்போக்கு

image

தொண்டமாநத்தம் சமாதி தெருவில் நேற்று 20-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ராமநாதபுரம் ஜிப்மர் கிளை மருத்துவமனையில் அவர்களுக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். அப்போது, சுகாதாரமற்ற குடிநீரை குடித்ததால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த குடிநீர் மாதிரி களை அதிகாரிகள் ஆய்வுக் காக எடுத்து சென்றனர்.

error: Content is protected !!