Tamilnadu

News May 6, 2024

தேனி மழைப்பொழிவு விவரம்

image

தேனி மாவட்டத்தில் ஆங்காங்கு நேற்று (மே.05) மழைப்பெய்தது. அதன் மழைப்பொழிவு விவரத்தை சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன் படி, ஆண்டிப்பட்டி பகுதியில் 4 சென்டி மீட்டரும், தேக்கடியில் 2 சென்டி மீட்டரும், பெரியார், சண்முகநதி, கூடலூர் பகுதிகளில் 1 சென்டி மீட்டரும் பதிவானது. நாளை தமிழகத்தில் ஆங்காங்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 6, 2024

திண்டுக்கல் மழைப்பொழிவு விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆங்காங்கு நேற்று(மே.05) மழைப்பெய்தது. அதன் மழைப்பொழிவு விவரத்தை சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன் படி, காமாட்சிபுரம் பகுதியில் 5 சென்டி மீட்டரும், வேடசந்தூரில் 3 சென்டி மீட்டரும், திண்டுக்கல் நகரத்தில் 2 சென்டி மீட்டரும் பதிவானது. நாளை தமிழகத்தில் ஆங்காங்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 6, 2024

மதுரை மழைப்பொழிவு விவரம்

image

மதுரை மாவட்டத்தில் ஆங்காங்கு நேற்று(மே.05) மழைப்பெய்தது. அதன் மழைப்பொழிவு விவரத்தை சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன் படி, பேரையூர் பகுதியில் 5 சென்டி மீட்டர் மழைப்பொழிவு பதிவானது. நாளை தமிழகத்தில் ஆங்காங்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 6, 2024

தருமபுரி: 5 அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி

image

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி மாதிரி பள்ளி, காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பேகாரஹள்ளி அ.மே.நி.பள்ளி, நத்தமேடு அ.மே.நி.பள்ளி, அரூர் அருகே நரி பள்ளியில் உள்ள பழங்குடியினர் நலத்துறைப் பள்ளி ஆகிய 5 பள்ளிகள் 12ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தின் படி தமிழ்நாடு அளவில் தருமபுரி 25வது இடத்தை பிடித்துள்ளது.

News May 6, 2024

கிருஷ்ணகிரியில் மழை…!

image

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, நாளை 7-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களிலும், 8-ம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

News May 6, 2024

பட்டுக்கோட்டை: முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு

image

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவி அபினேஸ்ரீ 580/600 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். இவர் 3 பாடங்களில் 100/100 மதிப்பெண் எடுத்துள்ளார். 2ம் இடமாக மாணவி நிஃப்ரின் 573, 3ம் இடமாக மாணவி ரிபாயா 568 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதலிடம் பிடித்த மாணவியை ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டி வருகின்றனர்.

News May 6, 2024

நாகை: 18 பள்ளிகள் 100% தேர்ச்சி 

image

தமிழகம் முழுவதும் பிளஸ் டூ பொதுத் தேர்வுக்கான முடிவு இன்று வெளியானது. இதில் நாகை மாவட்டத்தில் 18 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அசத்தியுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள புறாகிராமம் உம்பளச்சேரி, வேட்டைக்காரனிருப்பு உட்பட 8 அரசு பள்ளிகள், 1 அரசு உதவி பெறும் பள்ளி,1 சுயநிதி பள்ளி,8 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என மொத்தம் 18 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

News May 6, 2024

ஒரு கிராமம் ஒரு பயிர் புதிய திட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் “1 கிராமம் 1 பயிர்” என்ற புதிய திட்டம் 636 வருவாய் கிராமங்களில் செயல்படுத்த உள்ளதாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அசோக் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விவசாயிகள் நன்மைக்காக ஒவ்வொரு வட்டாரத்திலும் 2 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 1 ஏக்கரில் நிரந்தர வயல் அமைத்து அதில் 1 பயிர் பயிரிடப்பட்டு பூச்சிகள் மற்றும் நோய்களை கண்காணித்து விவசாயம் மேம்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

News May 6, 2024

விழுப்புரத்தில் அறிக்கை வெளியிட்ட ஆட்சியர்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழ்நாடு முழுவதும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட தேர்ச்சி அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி இன்று வெளியிட்டார். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.

News May 6, 2024

வேலூர்: தீ விபத்து..!

image

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மின் சாதன பராமரிப்பு அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் மின் தடை ஏற்பட்டது.அச்சமயம் லிப்டில் சிக்கிய பொதுமக்கள், அதிகாரிகளை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மீட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!