India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. தனியார் பள்ளிகளில் பஸ் மற்றும் வேன்களில் மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர். வாகனங்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு ஆண்டு தணிக்கை இன்று ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்தது. ஆட்சியர் வளர்மதி கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்று டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட கிரிக்கெட் போட்டிக்கு 14 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் தேர்வு மே 19 காலை 7மணிக்கு ஈரோடு எஸ்.எஸ்.அகாடமி பயிற்சி மையத்தில் நடைபெறவுள்ளது. 1.9.2010 தேதிக்கு பின்பு பிறந்தவர்கள் வயது சான்றிதழ், வெள்ளை சீருடை, காலணிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களுடன் வர வேண்டும் என ஈரோடு மாவட்ட செயலாளர் சுரேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக, தொழிலாளர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, மே மாதம் இறுதி வரை, சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று
அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் “தொழிலக பாதுகாப்பு இயக்ககம் ” தற்போது உத்தரவிட்டுள்ளது.

முதுகுளத்தூர் சாம்பகுளம் இந்திரா குடிநீர் தொட்டியை சேதப்படுத்தியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாக நுழைவு வாயில் முன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து கலெக்டரிடம் மனு அளித்துச் சென்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை சமத்துவபுரம், இலைக் கடம்பூர், நலனாயகபுரம், ஆர் எஸ் மாத்தூர், ஆலத்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கோடை மழை இன்று பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் பூமி குளிர்ந்தது. கத்திரி வெயில் வாட்டி வந்த நிலையில் அரியலூர் மாவட்ட மக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒட்டன்சத்திரம் ரயில்வே நிலையம் அருகில் உள்ள காந்திநகர் தண்டவாளம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ரயில்வே போலீசாருடன், ஒட்டன்சத்திரம் போலீசாரும் இணைந்து வழக்கை விசாரித்து வந்த நிலையில், சிசிடிவி ஆதாரத்தை வைத்து வினோபா நகரைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் கொலையாளி என உறுதி செய்யப்பட்டு இன்று கைது செய்தனர்.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் 23 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 84.97% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 77.49 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 90.58 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் திருவாரூர் மாவட்டம் 35ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 71.10% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 87.40 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 79.71 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் 25 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 84.74% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 77.04 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 90.66 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் 30 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 82.56% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 74.03 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 89.42 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.