India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஒடிசா மாநிலம், சம்பல்பூரிலிருந்து மே 1 முதல் ஜூன் 26ஆம் தேதி வரை வாரந்தோறும் புதன்கிழமை காலை 11.35 மணிக்கு புறப்படும் இரயில் (எண்:08311) மறுநாள் இரவு 8.30 மணிக்கு ஈரோடு வந்தடையும். பின் மறுமாா்க்கமாக இந்த இரயில் (எண்:08312) மே 3 முதல் ஜூன் 28 வரை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.15 மணிக்கு சம்பல்பூா் சென்றடையும் என தெற்கு இரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் வி.கே.புரம் டாணா வாட்ச்மேன் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஹரிஹரசுப்பிரமணியன் (56). இவர் ஆம்பூர் மெயின் ரோட்டில் நேற்று (ஏப்.21) நடந்த சென்றபோது அவர் மீது பைக் மோதியதில் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி அளித்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது பரிதாபமாக உயிரிழந்தார்.

பரமக்குடியில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் தோல் தைத்து தருபவர்களிடம் நகராட்சி நிர்வாகம் 100 ரூபாய் முதல் வரி வசூல் செய்கின்றனர். வெயிலின் தாக்கத்தை பொருட்படுத்தாமல் சேவை செய்து வரும் இவர்களிடம் நகராட்சி நிர்வாகம் கூடுதல் வரி வசூல் செய்வது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொன்னேரி அடுத்த பழவேற்காடு செம்பாசிபள்ளி குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (26). இவர் நேற்று பெரியபாளையத்தில் உறவினரின் திருமணத்திற்கு சென்றுவிட்டு விடியற்காலை வீட்டிற்கு பைக்கில் பழவேற்காட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பொன்னேரி அடுத்த பிரளயம்பாக்கம் சாலை கல்வெட்டில் மோதி பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பழனி அருகே ஆயக்குடியில் இன்று அதிகாலை பால் வியாபாரத்திற்கு சென்ற ஜெகதீசன் என்பவர் மீது கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது. குடும்பத்தகராறு காரணமாக உறவினர் ராம்குமார் என்பவர் ஜெகதீசனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியதாக தெரிகிறது. ஜெகதீசனை மீட்டு ஆபத்தான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆயக்குடி போலீசார் விசாரிக்கன்றனர்.

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு முதலே சென்னைக்கு மக்கள் அதிக அளவு சென்று கொண்டிருக்கின்றனர். குறிப்பாக இன்று (ஏப்ரல் 22) காலை 10.30 மணியளவிலிருந்து வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சென்னைக்கு செல்ல மக்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே உள்ளது. தொடர்ந்து அரசு போக்குவரத்து கழகம் தேவைக்கேற்றவாறு பேருந்துகளை அதிகப்படுத்தி இயக்கி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக பகல் நேரங்களில் சாலையோர குளிர்பான கடைகளில் தாகம் தணிப்பதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மானூர் வட்டார பகுதிகளில் அதிகாலை விற்பனைக்கு கொண்டுவரப்படும் இளநீர் காலை 10 மணிக்குள் விற்று தீர்ந்துவிடுகின்றன . ஒரு இளநீர் 30 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி(46) இவர் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று பால்பாண்டி அவரது மனைவியை தாக்கியதால் ஆத்திரமடைந்த அவரது 16 வயது மகன் பால்பாண்டியை கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பால்பாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வாத்து, கோழி பண்ணைகளில் பறவைகள் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதால், தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் கால்நடைகள் பராமரிப்பு துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவை மாவட்ட கால்நடைகள் பராமரிப்புத்துறை இணை இயக்குநர் பெருமாள்சாமி நேற்று கூறுகையில், “தமிழகத்தில் பறவை காய்ச்சல் தொற்று இல்லை” என தெரிவித்தார்.

மக்களவை தேர்தல் நடந்த ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக செல்போனில் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு வருகிறது. இந்த அழைப்பில் தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் ? அதிமுகவுக்கு என்றால் இந்த எண்ணை அழுத்தவும், திமுகவுக்கு என்றால் இந்த எண்ணை அழுத்தவும் என கருத்துக்கணிப்பு கேட்கப்பட்டு வருகிறது. இது வாடிக்கையாளர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.
Sorry, no posts matched your criteria.