India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகாசி அருகே மாரனேரி சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர் சின்ன முத்தையா (54). இவர் சில நாட்களுக்கு முன் கிராமத்தில் நடந்த ஊர் பொதுக்கூட்டத்தில் நாட்டாமையை எதிர்த்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்பகை காரணமாக நேற்று வீட்டில் இருந்த சின்ன முத்தையாவை நாட்டாமை பெருமாள் குடும்பத்தினர் சேர்ந்து சரமாரியாக தாக்கினர்.காயமடைந்த சின்ன முத்தையா புகாரில் 10 பேர் மீது வழக்கு.

பாப்பாரப்பட்டி சேர்ந்த பூங்காவனம் அவரது மனைவி தேவி.இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.நேற்று மீண்டும் குடும்ப பிரச்சினையில் மன உளைச்சலுக்கு ஆளான அவரது மகள் புனிதா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தன. அங்கு சிகிச்சை பலனின்றி புனிதா உயிரிழந்தார்.

மயிலாடுதுறையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி நேற்று சிறப்புரையாற்றினார். அப்போது இந்தியா கூட்டணியின் நோக்கம் நல்லாட்சியை தருவது என்றும் , பிரதமர் மோடி சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்பதில்லை என விமர்சித்தார். மேலும் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்பவர்களின் , உலக மகா ஊழலாக தேர்தல் பத்திர முறைகேடு அமைந்திருக்கிறது என தெரிவித்தார்.

பாப்பாரப்பட்டி சேர்ந்த பூங்காவனம் அவரது மனைவி தேவி.இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.நேற்று மீண்டும் குடும்ப பிரச்சினையில் மன உளைச்சலுக்கு ஆளான அவரது மகள் புனிதா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தன. அங்கு சிகிச்சை பலனின்றி புனிதா உயிரிழந்தார்.

சிவகாசி அருகே மாரனேரி சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர் சின்ன முத்தையா (54). இவர் சில நாட்களுக்கு முன் கிராமத்தில் நடந்த ஊர் பொதுக்கூட்டத்தில் நாட்டாமையை எதிர்த்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்பகை காரணமாக நேற்று வீட்டில் இருந்த சின்ன முத்தையாவை நாட்டாமை பெருமாள் குடும்பத்தினர் சேர்ந்து சரமாரியாக தாக்கினர்.காயமடைந்த சின்ன முத்தையா புகாரில் 10 பேர் மீது வழக்கு.

பெரம்பலூா் மாவட்டத்தில் சித்திரை மாதத்தில் முயல் வேட்டை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். முயல் வேட்டையாடுவது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைக்கு உரிய குற்றமாகும். வனத்துறையினா் கிராமங்கள் தோறும் தற்போது ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனா். முயல் வேட்டையில் ஈடுபடுவோா் கண்டறியப்பட்டால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவா் என மாவட்ட வனஅலுவலா் குகனேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்

புதுவை: முத்தியால்பேட்டை ஆறுமுகா திருமண நிலையத்தில் யோகா வகுப்பு நாளை 17-ம் தேதி துவங்கி 7 நாட்கள் நடக்கிறது. இந்த யோகா வகுப்பில் கலந்து கொள்வதால் ஆஸ்துமா, ஒற்றை தலைவலி, நீரிழிவு, முதுகு வலி, செரிமான கோளாறுகள், மனக்கவலை, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். விருப்பம் உள்ளவர்கள் 94432-77486, 94432-75040 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சின்னசேலம் அண்ணாநகர் பகுதியில் சாலையில் பெரியசாமி என்பவர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் சிகரெட் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஆகி அடிதடியில் முடிந்தது. அப்போது, ஆத்திரமடைந்த பெரியசாமி கடையில் வைத்திருந்த கத்தி எடுத்து தினேஷ் கையில் குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடவூர் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் கை சின்னத்திற்கு நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது ஜனநாயகத்தை காப்பாற்ற அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், நாட்டைக் காப்பாற்ற I.N.D.I.A கூட்டணி வேட்பாளருக்கு அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பேசினார். உடன் எம்எல்ஏ சிவகாமசுந்தரி உள்ளிட்டோர் இருந்தனர்.

திருப்பத்தூா் அடுத்த கொரட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை சுமாா் 20 முறை மின்விநியோகம் தடை செய்யப்பட்டது. மாதந்தோறும் பராமரிப்புக்காக மின்தடை செய்யப்படுவது வழக்கம். ஆனால் கொரட்டி பகுதியில் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. தற்போது வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை மின்வாரிய அதிகாரிகள் சரிசெய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.