Tamilnadu

News May 8, 2024

பெரம்பலூர்: உயர்கல்வி வழிகாட்டி உறுப்பினர்களுக்கான பயிற்சி

image

பெரம்பலூர், சிறுவாச்சூர் இராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று(மே 7) பள்ளிக் கல்வித்துறை சார்பில் முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமையில், உயர்கல்வி வழிகாட்டி உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. நான் முதல்வன் திட்டம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விரிவாக பேசினர். மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News May 8, 2024

கல்லூரி கனவு 2024 மே.8இல் தொடக்கம்

image

12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு 12ம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அதன்படி, திருச்சியில் இன்று கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News May 8, 2024

சிவகங்கை:  இன்று மின்தடை

image

எஸ்.புதூர் துணை மின்நிலையத்தில் குளத்துப்பட்டி மின்பாதையில் உள்ள மின்கம்பிகளை தரம் உயர்த்தும் பணி நடைபெறவுள்ளது. பராமரிப்பு பணியின்போது வாராப்பூர் அரியாண்டிபட்டி குளத்துப்பட்டி கிழவயல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று புதன்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்

News May 8, 2024

முல்லை பெரியாறு அணை நிலவரம்

image

தேனி மாவட்டம் கம்பம் சுற்று வட்டார பகுதியில் கோடை வெயில் வாட்டி வதைத்த வேளையில் இரண்டு நாட்களாக மழை பெய்து வந்தது. முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 152 அடி. தற்போது நீர்மட்டம் 115 அடியாக உள்ளது. அணைக்கு நீர் இருப்பு 1727 மில்லியன் கன அடியாக இருந்தது. குடிநீர் தேவைக்காக இரைச்சல் பாலம் வழியாக வினாடிக்கு 100 கன அடியாக திறந்து விடப்படுகிறது.

News May 8, 2024

சென்னை: வேர்கடலையை விழுங்கிய குழந்தை பலி

image

சென்னை, ஜாபர்கான்பேட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் சரவணன்(32). இவருக்கு நிரஞ்சன் சாய் எனும் 1 வயது ஆண் குழந்தை இருந்தது. 2 நாட்களுக்கு முன்பு, கீழே இருந்த வேர்கடலை பருப்பை எடுத்து குழந்தை சாய் விழுங்க முயற்சித்ததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை நேற்று(மே 7) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

News May 8, 2024

பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை

image

கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து நீதிமன்றங்களிலும், சட்ட உதவி மற்றும் சட்ட அறிவு பெறவும், பொதுமக்களுக்கு அவற்றை இலவசமாக எடுத்துரைப்பதற்காக 50 “சட்டம் சார்ந்த தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இவர்கள் அனைத்து பொதுமக்களுக்கும் இலவச சட்ட ஆலோசனைகளை வழங்குவார்கள் என  நீதிபதிகள் தெரிவித்தனர்.

News May 8, 2024

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல்

image

உயர் அதிகார குழு ஒப்புதல் HIGH POWER COMMITTEE வழங்கி 17மாதங்களாக COMEPETANT AUTHORITY பல்வேறு துறைகளின் ஒப்புதல் வழங்காமல் முடங்கியிருந்த சென்னை விமான நிலையம், கிளாம்பாக்கம் மெட்ரோ இரயில் திட்டத்திற்கு தமிழக அரசின் COMEPETANT AUTHORITY ஒப்புதல் வழங்கி கோப்புகள் தமிழக அரசின் நிதிதுறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக RTI  மனுக்கு தமிழக அரசு பதிலளித்துள்ளது.

News May 8, 2024

அந்தியூர் : ரூ.7.97 லட்சத்திற்கு ஏலம்

image

அந்தியூர் அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளை பொருட்கள் ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் 3,254 தேங்காய்கள் ரூ.20,574-க்கும், 74 மூட்டை தேங்காய் பருப்பு ரூ.2,17,125 க்கும் ஏலம் போனது. 172 மூட்டை நிலக்கடலை ரூ.3,72,176 க்கும், 22 மூட்டை எள் ரூ.1,88,034 க்கும் ஏலம் போனது. மொத்தம் வேளாண் விளை பொருட்கள் ரூ.7,97,909 க்கு ஏலம் போனதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

News May 8, 2024

மே தின பொதுக்கூட்டம்

image

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மே தினம் மற்றும் மறைந்த முருகேசன் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு சேகர் தலைமை வகிக்க, சிறப்பு விருந்தினர்களாக மாநில குழு உறுப்பினராக வாலண்டினா, ஜெயசீலன் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News May 8, 2024

செங்கத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் கடந்த நான்கு நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் கோடை வெப்பத்தில் மின்விசிறி, மிக்ஸி போன்ற வீட்டு உபயோக பொருட்களை இயக்க இயலாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மின்வெட்டு குறித்து முறையான அறிவிப்பை வெளியிட அப்பகுதி பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.

error: Content is protected !!