India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தினம்தோறும் பல்வேறு விபத்துக்கள் குறித்தும், சாலை விதிகள் விழிப்புணர்வு குறித்தும் அறிக்கை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (மார்ச் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோவை தவிர்த்திடுங்கள். உங்கள் குழந்தையின் உயிரை பணயம் வைக்காதீர்கள்” என தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம், வழுதரெட்டி எல்லீஸ் சத்திரம் சாலையில் தனியார் பீர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை 5:00 மணிக்கு திடீரென தொழிற்சாலையில் உள்ள புகை போக்கி பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறினர். தகவல் அறிந்த விழுப்புரம் தீயணைப்பு துறையினர், விரைந்து சென்று, தீயை அணைத்தனர். மேலும், இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

ராணிப்பேட்டை அருகே தனியாருக்கு சொந்தமாக மரக்கட்டைகள் சேமித்து வைக்கும் கிடங்கில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினர் 2:30 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான மரக்கட்டைகள் தீயில் எரிந்து நாசமானது.

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி, வெள்ளனூர் கால் நிலையம் எல்லைக்குட்பட்ட வாகவாசல் வளைவு அருகில் நேற்று காலை தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாததால், மளிகைக் கடைக்காரரிடம் இருந்து ரூ.60 ஆயிரத்தை தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

வேப்பந்தட்டை வட்டம், பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் உள்ள வெங்கனூர் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ரூ. 79,000 பணத்தை உரிய ஆவணங்கள் ஏதுமில்லாமல் காரில் எடுத்து வந்த விஜயபுரத்தை சேர்ந்த முருகேசன் என்பவரிடமிருந்து அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

உருளையன்பேட்டை சேர்ந்த அய்யூப் பெரியமார்க்கெட்டில் மளிகை கடை நடத்தி வந்தார். இந்த கடையை அபகரிக்க திட்டமிட்டு ஒரு கும்பல் மிரட்டியதால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து நில அபகரிப்பு கும்பல் மீது பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என அத்தொகுதி எம்எல்ஏ நேரு, பொது நல அமைப்பினருடன் இணைந்து இன்று திடீரென பெரியகடை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் இறுதி நாளான இன்று பாமக உட்பட 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஏற்கனவே 13 பேர் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மொத்தம் 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னார்குடி பின்லே பள்ளியில் பயின்ற குமட்டித்திடல் சந்தானம் மத்திய இணை ரயில்வேத்துறை அமைச்சராக செயல்பட்டவர். அன்னாரின் நினைவாக அவரது குடும்பத்தார் பின்லே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு கல்வி உதவித் தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகின்றனர்.
அவ்வாறே இந்த ஆண்டு ஆதித்யா என்னும் மாணவனுக்கு 60,487 ரூபாய் அவர்கள் குடும்பத்தார் சார்பாக இன்று வழங்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் திருக்கல்யாணம் மற்றும் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு மார்ச் 28, 29 ஆகிய 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்து மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி திருநகரிலிருந்து மதுரை நகருக்குள் வரும் வாகனங்கள், கிரிவல பாதை மற்றும் தி.குன்றம் மேம்பாலத்தில் செல்வதற்கு அனுமதி இல்லை எனவும் வாகனங்கள் அனைத்தும் GST சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவையில் திமுக-அதிமுக-பாஜக ஆகிய கட்சிகள் நேரடியாக மோதுகின்றன. இதனால் கோவை மிகவும் பரபரப்பான தொகுதியான உருவெடுத்துள்ளது. இந்நிலையில் பாஜக மாநில தலைவரும் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலையின் சொத்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, அவர் அசையும் சொத்து 36 லட்சம், அசையா சொத்து ரூ.1.12 கோடி, அவரது மனைவி பெயரில் அசையும் சொத்து ரூ.2 கோடி, அசையா சொத்து 53 லட்சம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.