India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈஸ்டர் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வசதிக்காக தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரயில் இன்று(மார்ச் 29) இரவு 7:30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நெல்லை வழியாக செல்கிறது. மறு மார்க்கத்தில் நாளை(மார்ச் 30) மாலை 4:30 மணிக்கு நாகர்கோயிலில் புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு நெல்லை வந்து, பின்னர் அங்கிருந்து தாம்பரம் செல்கிறது.

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் விழா நிறைவடைந்ததையடுத்து கோயில்களில் வைக்கப்பட்டிருந்த 15 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. பண்ணாரி அம்மன் கோயில் துணை ஆணையர் ரா.மேனகா, பவானி சங்கமேஸ்வரர் கோயில் துணை ஆணையர் சு.சுவாமிநாதன் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில் ரூ.1 கோடியே 5 லட்சத்துக்கு 96 ஆயிரம், 295 கிராம் தங்கம், 757 கிராம் வெள்ளி கிடைத்துள்ளது.

நீலகிரி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட உதகை சட்டமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஓபிஎஸ் அணி, பா.ம.க, அ.ம.மு.க, த.மா.க, த.ம.மு.க, ஐ.ஜே.க, புதிய நீதிகட்சி, இ.ம.க.மு.க ஆகிய கட்சிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்களுடன் பாரதிய ஜனதா செயல்வீரர்கள் கூட்டம், உதகை தேவாங்கர் சமூக திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே வழுவூர் மாவீரன் வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் வழுவூர் வி ஜி கே மணி இல்லத்தில் நேற்று மாவீரன் வன்னியர் சங்க கலை இலக்கிய அணி மாவட்ட நிர்வாகி கடலி கார்த்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவீரன் வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் வழுவூர் வி ஜி கே மணி கலந்து கொண்டு நிர்வாகிக்கு சால்வை அணிவித்து கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி நகர கழக செயலாளர் எஸ்.கே.நவாப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கிருஷ்ணகிரி நகர தி.மு.க சார்பாக 11 பேர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர். முன்னதாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நகர மன்ற தலைவர் பரிதா நவாப், துணை தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

செய்யூர் அருகே முதலியார்குப்பம் கிராமத்தில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் ‘ரெயின் ட்ராப் போட் ஹவுஸ்’ உள்ளது.கோடை விடுமுறை துவங்கப்பட உள்ளதால், சுற்றுலா பயணியரை கவரும் விதமாக, புதிய ‘டிஸ்கோ’ போட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
நான்கு பேர் அமரும் இருக்கைகள் கொண்ட ‘டிஸ்கோ’ போட்டில் சவாரி செய்ய, 10 நிமிடத்திற்கு ரூ.2,400 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொன்னேரி அடுத்த புதுவாயல் GNT சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கண்ணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழவேற்காட்டில் இருந்து கும்முடிபூண்டிக்கு சென்ற பெர்னார்டு என்பவரின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ. 4 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. பின்னர் அதனை கைப்பற்றிய பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

கிறிஸ்தவர்கள் தவக்காலத்தின் நிறைவு வாரம் முன்னிட்டு இன்று நடைபெறக்கூடிய புனித வெள்ளியையொட்டி நேற்று காரைக்காலில் புனித தேற்றரவு அன்னை ஆலயம் சார்பில் நிர்மலா ராணி பெண்கள் பள்ளி வளாகத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயேசு தனது சீடர்களின் பாதம் கழுவி ஒருவருக்கொருவர் ஏற்றத்தாழ்வு இல்லை சமமானவர்கள் என்பதை தெரிவிக்கும் வகையில் புனித நிகழ்வை நடத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு ஆத்தூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவர் நேற்று அவரது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரின் பக்கத்து வீட்டு மூதாட்டி ஐயங்கனி (60) என்பவர் சண்டையை தடுக்க முயன்றபோது அவர் தாக்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோமாசிபாடி தூய புதுமைப்பதக்க அன்னை ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் புனித வாரம் நிகழ்வான புனித வியாழனான நேற்று இயேசுவின் பாதம் கழுவும் சடங்கு அருட்பணி ஜான் பீட்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் இறுதி உணவு நிகழ்வை நினைவு கூறும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.