India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஸ்ரீபெரும்புதூர் அருகே மணணூர் பகுதியை சேர்ந்தவர் பாலசந்தர்(36), சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது 12 வழக்குகள் நிலுவையிலுள்ள நிலையில், கடந்த வாரம்தான் சிறையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம்(ஏப்.5), தாய் ரெஜினாவை மது போதையில் தாக்கியுள்ளார். இது குறித்து பாலசந்தரின் சகோதரர் மோகனரங்கனுக்கு தெரிய வரவே கட்டையால் தாக்கியதில் பாலசந்தர் உயிரிழந்தார். போலீசார் மோகனை கைது செய்தனர்.

நாடாளுமன்ற பொதுத் தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா (7.4.24) நாமக்கல் – கரூர் மாவட்ட எல்லையில் உள்ள பரமத்தி வேலூரில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியில் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு சோதனை சாவடி வழியாக வருகை தந்த அனைத்து வாகனங்களை நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் தங்கர்பச்சான், கடலூர் சட்டமன்ற தொகுதி சிங்கிரிகுடி பகுதியில் இன்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கிருந்த ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சி, விளையாடி மகிழ்ந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உடன் பாமக கடலூர் மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் மற்றும் பாமக நிர்வாகிகள் இருந்தனர்.

கம்பம் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கோதண்டராமன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து சென்றபோது கம்பம் பார்க் ரோடு உழவர் சந்தை ரவுண்டானாவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் விற்றுக் கொண்டிருப்பதை கண்டனர். போலீசார் அவரை சோதனையிட்டு அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை கைப்பற்றி அவரை கைது செய்தனர்.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும், கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை நாமக்கல்லில் பிரச்சாரம் செய்ய உள்ளார். மேலும் காலை 9 மணிக்கு நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள நான்கு தியேட்டர் முன்பு தொடங்கி பேருந்து நிலையம் வரையில் மக்களைச் சந்திக்கும் வகையில் திறந்த வாகனத்தில் நின்றபடி அவா் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சித்திரம் பவுண்டேஷன் சேலம் கோபி மருத்துவமனை சார்பாக இலவச பொது மருத்துவ பரிசோதனை முகம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்றது.இதில் வார்டு கவுன்சிலர் கேசவன் பாலு மோகன்தாஸ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு ஆலோசனை பெற்று சென்றனர்.இந்நிகழ்வில் மரு.மாதேஸ்வரன் சித்திரம் பவுண்டேஷன் நிர்வாகிகள் ராஜேஸ் அருள் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவில் அருகே நேற்று(ஏப்.6) மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 சக்கர வாகனத்தில் இறந்து 2 நாளான பசு ஒன்றை, வைக்கோல் வைத்து மறைத்து எடுத்து சென்ற நிலையில், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். சந்தேகமடைந்த போலீசாரின் தீவிர விசாரணையில், உணவகத்திற்கு இறைச்சிக்கு சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

திருக்கோவிலுார் அடுத்த அத்தண்டமருதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம், மனைவி சுமதி(45). இவருக்கு, கர்ப்பப்பை அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் மதியம் வலி அதிகமானதால் மனமுடைந்த அவர் பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து திருக்கோவிலுார் போலீசார் விசாரிக்கின்றனர்

விருதுநகர், ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரும் இவருடைய மனைவியும் கூலி வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று 7 1/2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.75 ஆயிரம் பணத்தை வீட்டில் பீரோவில் வைத்துவிட்டு கிருஷ்ணன் வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், மாலை திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டில் இருந்த பணம் மற்றும் நகை திருடப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் பதற்றம் நிலவி வருகிறது.இதனிடையே மனிதர்களின் அருகாமையை சிறுத்தையானது தவிர்க்கும் என்றும் சிறு விலங்குகளை மட்டுமே வேட்டையாட கூடிய தன்மை உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என வனத்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அதிகாலை நேரங்களில் கண்டிப்பாக 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வெளியில் அனுப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.