Tamilnadu

News April 17, 2024

கடலூர்: காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம்

image

கடலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தலை (2024) முன்னிட்டு, வரும் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் நேரில் சென்று வாக்களிக்கலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியரும், கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலருமான அருண் தம்புராஜ் இன்று தெரிவித்துள்ளார்.

News April 17, 2024

திருவாரூர்: “தயாராவோம், வாக்களிப்போம்”

image

திருவாரூர் ஆட்சியர் சாருஸ்ரீ இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தயாராவோம் வாக்களிப்போம்” என வாக்களிக்க தேவையான கீழ்க்கண்ட ஆவணங்களை குறிப்பிட்டுள்ளார். வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, 100 நாள் வேலை அட்டை, மருத்துவ காப்பீடு திட்ட அட்டை, ஸ்மார்ட் கார்டு, ஓட்டுனர் உரிமம், வங்கி புத்தகம், அடையாள அட்டை, அலுவலக அடையாள அட்டை, இதில் ஏதும் இருந்தாலும் வாக்களிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

News April 17, 2024

பெரம்பலூர் : உண்டியல் மொத்த மதிப்பு 3,20,000

image

பெரம்பலூர் ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவில் மற்றும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் உண்டியல் திறப்பு இன்று,
திருக்கோவில் ஆய்வாளர் தீப லட்சுமி முன்னிலையில் திறக்கப்பட்டது. திருக்கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் ரொக்கம் மற்றும் நாணயங்களை எண்ணினர்.
இதில் உண்டியலில் ரெக்கம், தங்கம், வெள்ளி உட்பட சுமார் மொத்த மதிப்பு 3,20,000 என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

News April 17, 2024

ட்ரோன் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் தீவிரம்

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சிவகாஞ்சி காவல் நிலையத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் 6 மணியுடன் நிறைவு பெற உள்ள நிலையில் 6 மணிக்கு மேல் தேர்தல் விதிகளை மீறும் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொள்ளுதல், பண பட்டுவாடா தடுத்தல் போன்ற விதிகளை மீறுபவர்களை ட்ரோன் மூலம் கண்டறிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

News April 17, 2024

விருதுநகரில் விஜய பிரபாகரன் உருக்கம்

image

விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக, தேமுதிக பொதுச்செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்து வந்த நிலையில், விஜய பிரபாகரன் பேசுகையில், எங்க அப்பாவுடைய ஆசையையும், கனவையும், நிறைவேற்றுவதற்கு ஒரு வழி எனக்கு கிடைத்திருக்கிறது.
கண்டிப்பாக இந்த தேர்தலில் வெற்றிபெற்று எங்க அப்பாவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் கூறினார்.

News April 17, 2024

மெரினாவில் உலவும் சுறா எச்சரிக்கை

image

சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 13ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த மணிமாறன் என்பவரின் காலை சுறா மீன் கடித்ததாகவும் அவர் சுதாரித்துக் கொண்டு நீந்தி கரைக்கு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இதில் காலில் காயமடைந்த அவர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார். இதனால் தமிழ்நாடு அரசு உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

News April 17, 2024

தேனியில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தேனி மாவட்டத்தில் இன்று(ஏப்.17) இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், தேனியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 17, 2024

திரையரங்குகளில் பகல் நேர காட்சிகள் ரத்து

image

சென்னை 19ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று சென்னை மற்றும் வெளி மாவட்டத்தில் 1,168 திரையரங்குகளிலும் பகல் நேர காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. எனினும், மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் வழக்கம்போல் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் 100% வாக்களிப்பதை ஊக்குவிக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News April 17, 2024

ராணிப்பேட்டை அருகே 3 பேர் கைது

image

பாணாவரத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் மகள் பாணாவரம் அரசு பள்ளியில் +2 படித்து வந்தார். இவரை பழையபாளையம் பகுதியை சேர்ந்த அப்பு(19) கிண்டல் செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட மாணவியின் தந்தை ஏழுமலை, அண்ணன் சூரியை, அப்பு தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 10ம் தேதி கத்தியால் வெட்டியுள்ளார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அப்பு மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரை நேற்று முன்தினம் பாணாவரம் போலீசார் கைது செய்தனர்.

News April 17, 2024

தென்காசி மாவட்டத்தில் மழை

image

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் மாலை 7 மணி வரை தென்காசி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!