India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கூடலூர் அருகே தாளூர் பகுதிக்கு நேற்று (ஏப்.15) காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மைசூரிலிருந்து ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். அங்கிருந்த மாணவிகளுடன் செல்பி போட்டோ எடுத்துக் கொண்டார். இதையடுத்து பேசிய ராகுல் காந்தி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு வருடத்திற்கு ரூ.1 லட்சம், படித்த இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக விஜய் வசந்த் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சியினர் குமரி மாவட்டம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் மனோ தங்கராஜ் பொதுமக்களிடம் நேற்று இரவு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நேற்றிரவு 7 மணியளவில் வேலூர் மாநகரில் பாகாயம் பகுதியில், வேலூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து திரைப்பட நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், நான் எம்ஜிஆரின் ரசிகன். இந்தத் தொகுதியில் வேலைவாய்ப்பு முகாம்கள், மருத்துவமனை நடத்தி நிறைய மக்கள் சேவையை தொடர்ந்து செய்துவரும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றார்.

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளன்று பொது விடுமுறை அளிக்காத தனியாா் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தோ்தல் அலுவலா் ச.வளா்மதி எச்சரித்துள்ளார். இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறை எண். 18004257015 04172 -273190, 04172-273191, 04172-273192, 04172 -273193 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு மக்கள் புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பம் பகுதியை சோ்ந்தவா் பிரபாகரன் ( 52). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த 12 ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரபாகரன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (ஏப்.15) அவர் உயிரிழந்தாா். இதுகுறித்து கம்பம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

ஈரோடு கொல்லம்பாளையம் பண்ணை நகர் பகுதியில் நேற்று சாலையோரம் அப்பகுதி மக்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்துள்ளனர். அந்த பேனரில் இங்கு தனிநபர் ஒருவர் பொதுவழிப் பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது குறித்து பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கம் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு திமுக ஆட்சியில் ரூ.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளதாக அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளா் அண்ணாதுரையை ஆதரித்து அமைச்சா் எ.வ.வேலு செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதில் செங்கம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளது எனக் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 767 புகாா்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. அதில் பணப் பரிவர்த்தணை தொடர்பாக 7,வாக்காளர் பட்டியல் தொடர்பாக 692, தேர்தல் விதி மீறல் தொடர்பாக 61,இதர புகார்கள் 7 என மொத்தம் 767 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யம் அருகே டிஎஸ்ஓ ரமேஷ் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் நேற்று தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது வேதாரண்யம்- நாகை பிரதான சாலையில் வந்த வாகனம் ஒன்றை மடக்கி சோதனை செய்ததில், கணக்கில் வராத ரூ.1,78,200 இருப்பது தெரிய வந்தது. இப்பணத்தை தேர்தல் பறக்கும் படையினரால் வரும் முதல் செய்யப்பட்ட அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இவ்விழாவின் 4-ம் நாளான நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் வில்லாபுரத்தில் உள்ள பாவக்காய் மண்டகப்படியில் எழுந்தருளி அங்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதனையடுத்து மாலையில் சுவாமி, அம்மன் கோவிலுக்கு புறப்பட்டபோது, வழிநெடுகிலும் சுவாமி அம்மாளை தரிசிக்க லட்சக்கணக்காண பக்தர்கள் திரண்டதால் மதுரை மாநகரமே ஸ்தம்பித்தது.
Sorry, no posts matched your criteria.