Tamilnadu

News March 22, 2024

சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி

image

சென்னையில் புலம்பெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வீடுகளின் தேவை கூடியுள்ளது. இந்நிலையில் வீட்டு வாடகை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வாடகை உயர்வுக்கு சொத்து வரியும் ஒரு காரணம் என சொத்து ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

News March 22, 2024

தூத்துக்குடியில் 2 நாட்கள் விடுமுறை

image

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தேர்தல் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், மார்ச் 23, 24 ஆகிய 2 நாட்கள் விடுமுறை நாள் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்ய இயலாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 25ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தாக்கல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மக்களவை தொகுதியில் இதுவரை 5 சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 22, 2024

தி.மலையில் குவிந்த மக்கள் கூட்டம்

image

வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோயிலில் இன்று பிரம்மோற்சவ திருவிழாவின் 7 ஆம் நாள் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ ரங்கநாதப் பெருமாள் திருத்தேரில் அமர்ந்து முக்கிய வீதிகளில் வலம் வந்தார். 500க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று தேரை வடம்பிடித்து இழுத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

News March 22, 2024

வாக்கு சேகரிக்க சென்ற பொழுது கோரிக்கை வைத்த முதியவர்

image

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளராக சுந்தர் என்பவரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும் படி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்ட பொழுது 82 வயது முதியவர் முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை என கோரிக்கை வைத்தார். உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு விரைவில் கிடைக்கும் உத்தரவாதம் அளித்தார். 

News March 22, 2024

ஆரணி: மாற்றுத்திறனாளி சுயேட்சை வேட்பாளராக மனு தாக்கல்

image

ஆரணி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக காந்தி நகரைச் சேர்ந்த பாபு என்ற மாற்றுத்திறனாளி சுயேட்சை வேட்பாளராக இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆரணி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளிடமும் சென்று வாக்கு சேகரிப்பேன் என அவர் தெரிவித்தார். 

News March 22, 2024

திருவண்ணாமலை: ஒற்றை விரல் புரட்சி செய்வோம்

image

தி.மலை மத்திய பேருந்து நிலையத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் 2024 மக்களவை தேர்தலையொட்டி 100 % வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (22.03.2024) மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தை பேருந்து பயணிகளிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News March 22, 2024

நாட்டறம்பள்ளி: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

image

மக்களவை தேர்தலையொட்டி ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 267 பூத் மையங்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜராஜன் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டது.

News March 22, 2024

திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

image

வாணியம்பாடி கே.பி.ஏ பேலஸ் அருகில் நாளை (மார்ச் 23) வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுக மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளதால் மாவட்ட பொறுப்பாளர்கள் கிளை செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் பல்வேறு அணியை சேர்ந்த நிர்வாகிகள் பாக முகவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள மாவட்ட செயலாளர் தேவராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

News March 22, 2024

திண்டுக்கல்: 18-சித்தர் கட்சி சார்பில் வேட்பு மனு

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாக வளாகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று பதினெட்டு சித்தர்கள் கட்சி சார்பாக மக்களவை தேர்தலில் போட்டியிட ஆண்டிமடம் ஆறுமுகசாமி என்பவர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

News March 22, 2024

நகராட்சியில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

image

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சொந்தமான இடத்தில் வேறொரு நபர் ஆக்கிரமித்து வீடு கட்ட தொடங்கியுள்ளார். இதுகுறித்து நகராட்சியில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று (மார்ச் 22) மாரியப்பன் நகராட்சி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!