India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் நாளை முதல் மே மாதம் 13ஆம் தேதி வரை திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும் நடைபெற உள்ளது. கூடுதல் விபரங்களுக்கு 04312420685 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பிரதீப்குமார் இன்று அறிவித்துள்ளார்.

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு, முதல்வர் மாநில இளைஞர் விருது சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.மேலும் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியும்.மேலும் விண்ணப்பிக்க மே 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை மாலை 4 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அருண் தம்புராஜ் இன்று தெரிவித்துள்ளார்.

கடலூரில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. அதனால் இன்று கடலூர் துறைமுகத்திற்கு குறைந்த அளவே மீன்கள் வந்ததால், மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதில் வஞ்சிரம் ஒரு கிலோ 1000 ரூபாய் முதல் 1300 ரூபாய் வரை விற்பனையானது. அதேபோல் பிற மீன்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.

மதுரை, பேரையூர் அருகே அத்திப்பட்டி கிராமத்தில் நடைபெற்று வரும் புதுமாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் அத்திப்பட்டி, வடகரை, மங்கல்ரேவு
மற்றும் சின்னக்கட்டளை ஆகிய 4 பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை இன்று முதல் 30ம் தேதி வரை 3 நாட்களுக்கு மூடுவதற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்திரவிட்டுள்ளார். இதையடுத்து இன்று முதல் டாஸ்மாக் மூடப்பட்டது.

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் வாகனங்களை மே மாதம் 4 வது வாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தங்களது வாகனங்களை தயார் செய்து ஆய்வு நாளன்று ஆய்வுக்கு உட்படுத்தி உரிய சான்று பெற்று இயக்க வேண்டும் என நாகை வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் வினோத் என்பவர் வாகன விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கொங்கராயபாளையம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு இன்று கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நேரில் மாலை அணிவித்து தனது இறுதி மரியாதையை செலுத்தினார்.

ராகினிப்பட்டியைச் சேர்ந்த விஜயலட்சுமி (19) தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் 2ம் ஆண்டு படித்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு வந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் தஞ்சாவூரில் உள்ள கல்லூரிக்குப் போவதாக கூறிச் சென்று சென்றவர் எங்கு சென்றார் தெரியவில்லை என அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் இன்று சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுவை அரசு கல்வித்துறை & விளையாட்டு துறை சார்பில், 17 &19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது. புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகள் புதுவை உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானம், கதிர்காமம் அரசு பள்ளி, புதுவை பல்கலைக்கழகம், அமலோற்பவம் பள்ளி ஆகிய இடங்களில் நடந்து வருகிறது.

சுட்டெரிக்கும் வெயிலை தாங்கும் விதமாக அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நீர், மோர் பந்தல் திறக்க அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அந்த வகையில் திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி. வி.சண்முகம் ஐந்து இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர்மோர் பந்தலை தொடங்கி வைத்தார். அதுமட்டுமல்லாமல் இன்று பொதுமக்களுக்கு பழங்கள் வழங்கப்பட்டது.

சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன்
வைக்கப்பட்டுள்ளன.
மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள்
உள்ளிட்ட இம்மையத்தின் அனைத்து பகுதிகளும் சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதனை சேலம் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.