Tamilnadu

News May 10, 2024

நீலகிரியிலிருந்து பெங்களூரு புறப்பட்ட சென்ற முதல்வர்

image

கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா கடந்த 7ஆம் தேதி உதகை வந்தார். ஒரு தனியார் பங்களாவில் தங்கி இருந்து ஓய்வு எடுத்தார். அவர் இன்று உதகையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். AICC உறுப்பினர் விவேக் லஜபதி, மாநில காங்கிரஸ் செயலாளர் நாகராஜ், மாவட்ட செயலாளர்கள் எஸ்.எம்.ரபீக், மானேக் சந்திரன், ரவிக்குமார் மற்றும் காங்கிரசார் மலர் கொத்து வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

News May 10, 2024

ராம்நாடு: அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி

image

ராமநாதபுரம் மாவட்ட அரசு மாதிரிப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்வு எழுதிய 76 மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்ததுடன் 495 மதிப்பெண் பெற்று ஒரு மாணவர் முதலிடத்தையும், 2 மாணவர்கள் 494 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடமும் பெற்றுள்ளனர். கணிதம் பாடத்தில் 20 பேர், அறிவியல் பாடத்தில் 11 பேர், சமூக அறிவியலில் 9 பேர் சதம் அடித்து சாதனை செய்துள்ளனர்.

News May 10, 2024

வைகை அணையில் 3000 கனஅடி தண்ணீர் திறப்பு

image

வைகை அணையில் இருந்து 3000 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்மாய்களில் நீரை தேக்கி வைத்து, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News May 10, 2024

புதுச்சேரி அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்!

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அரசு பள்ளியின் தேர்ச்சி சதவீதம் வெளியாகியுள்ளது. புதுச்சேரி அரசு பள்ளியில் 81.72% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 75.61% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 87.43 % தேர்ச்சி அடைந்துள்ளனர். காரைக்கால் அரசு பள்ளியில் 65.42 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 56.89 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 73.89 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 10, 2024

காவல் நிலையத்திற்கு சென்ற மூதாட்டி உயிரிழப்பு

image

செங்கம் அடுத்த இறையூர் பகுதியை சேர்ந்த 75 வயது கம்சலா என்னும் மூதாட்டி, அருகில் உள்ள விவசாய நில உரிமையாளர் போபிக்கும் நிலத்தகராறு ஏற்பட்ட நிலையில் பாச்சல் காவல் நிலையத்தில் கம்சலாபுகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நேற்று  இருவரையும் அழைத்து விசாரணை செய்தபோது காவல் நிலையத்தில் கம்சலா மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 10, 2024

தென்காசியில் 7 நாட்களுக்கு மழை

image

தமிழகத்தில் இன்று முதல் 16-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்காசி, விருதுநகர்,திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

News May 10, 2024

விருதுநகரில் 7 நாட்களுக்கு மழை

image

தமிழகத்தில் இன்று முதல் 16-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

News May 10, 2024

சேலம் மத்திய சிறையில் 100% தேர்ச்சி

image

சேலம் மத்திய சிறையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 23 சிறை கைதிகள் எழுதிய நிலையில் 23 பேரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சேலம் மத்திய சிறையிலிருந்து தேர்வு எழுதி 100% தேர்ச்சி பெற்றது இதுவே முதல் முறையாகும். தேர்ச்சி பெற்றவர்களை சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் நேரில் அழைத்து பாராட்டினார்.

News May 10, 2024

10வது இடம் பிடித்து விழுப்புரம் மாவட்டம்

image

விழுப்புரம் மாவட்டம் 10ம் வகுப்பு தேர்வில், மாநில அளவில் 10வது இடத்தினை பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 93.51 ஆகும். மாநில அளவில் அரசு பள்ளிகளில் விழுப்புரம் 6வது இடம் பெற்றுள்ளது. சென்ற 2022.2023 கல்வியாண்டில் 90.57 சதவிதம் பெற்று, மாநில அளவில் 24வது இடத்தில் இருந்த விழுப்புரம், தற்போது 3.54 சதவீதம் உயர்ந்து 94.11 சதவீதம் பெற்று மாநில அளவில் 10வது இடத்தினை பெற்றுள்ளது.

News May 10, 2024

தவறி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா பெரியாங்குப்பம் ஊராட்சி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி (60) ,கூலி தொழிலாளியான இவர் நேற்று இரவு 8 மணிக்கு (மே.9) ஆம்பூரில் இருந்து பெரியாங்குப்பம் ஆட்டோவில் வந்தபோது ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார் இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

error: Content is protected !!