India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பழனிமலைக் கோயிலுக்கு செல்லும் வழியில் குப்பை கிடங்கில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மேலும் அப்பகுதியை சேர்ந்த 32 ஆவது வார்டு கவுன்சிலர் தீனதயாளன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டு விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இதனால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது . இச்சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

வேங்கிக்கால் ஓம் சக்தி நகரில், 2024 மக்களவை தேர்தலையொட்டி வாக்கு சதவீதம் அதிகரிக்கும் நோக்கில் மாற்றுத்திறனாளி வாக்களிக்க ஏதுவாக அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று 12-னு படிவத்தினை இன்று (23.03.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

தேனி மாவட்டம்
போடிநாயக்கனூரில்
யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் போடி தேனி மாவட்ட அமைச்சியூர் கபடி கழகம் இணைந்து மாவட்ட அளவிலான கபடி போட்டி விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு ஆசிரியர் சங்கிலிக்காலை ஜே. ஜே.செல்வின், ரிச்சர்ட் கலந்து கொண்டனர். மேலும் இந்த போட்டியில் பல மாவட்டங்களிலிருந்து வருகை தந்து கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதனை அடுத்து தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தாமாக தலைவர் எஸ் டி ஆர் விஜயசீலன் இன்று கட்சியின் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முருக பக்தர்கள் நடைபயணமாக பாதயாத்திரை வருவர். அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலுக்கு இன்று வந்தடைந்தனர்.

நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் தங்க மலைமேல் உள்ள சென்றாய சாமி ஆலயத்தின் உற்சவ விழாவின் 5 ஆம் நாளான இன்று சுவாமியின் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறை சார்பில் பல இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இன்று போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் தர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜராஜன் மற்றும் பலர் உள்ளனர்.

செங்கம் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மக்களவை தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

திருவண்ணாமலை, வேங்கிக்கால் பேருந்து நிலையம் அருகே, அன்னை அஞ்சுகம் நகரில் 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்கு சதவீதம் அதிகரிக்கும் நோக்கில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக நேரில் சென்று 12-D படிவத்தினை இன்று (23.03.2024) மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார். இதில், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

திருவண்ணாமலை பச்சையம்மன் கோயில் தெருவில் தேர்தல் குறித்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஆட்சியர் கலந்துகொண்டு அப்பணியை தொடங்கி வைத்தார்.
Sorry, no posts matched your criteria.