Tamilnadu

News April 16, 2024

மயிலாடுதுறை: காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம்

image

மயிலாடுதுறையில் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காவலர்கள் பலர் பங்கேற்றனர். மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பணிகளை பார்வையிட காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

News April 16, 2024

அக்கா 1825″ என்ற தலைப்பில் தென்சென்னை

image

தென்சென்னை தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கையை பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இன்று வெளியிட்டார். அக்கா 1825 (365×5 years) என்ற தலைப்பில் தேர்தல், தமிழிசை செளந்தரராஜனின் உத்தரவாதம் என்ற வாசகத்துடன் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், நான் தொடர்பு எல்லைக்கு உள்ளே உள்ள வேட்பாளராக இருக்க ஆசைப்படுகிறேன் என
தமிழிசை தெரிவித்தார்.

News April 16, 2024

ஈரோடு: இன்று கடைசி நாள்

image

ஈரோடு மாவட்டத்தில், மக்களவை தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு, ஈரோடு கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடத்தில் கடந்த 13 மற்றும் 14ஆம் தேதி தபால் வாக்கு பதிவு நடந்தது. இதில் 2,181 பேர் தபால் வாக்களித்தனர். இந்நிலையில், தபால் வாக்களிக்காமல் விடுபட்டவர்களுக்காக இன்று (16ம் தேதி), ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்கு பதிவுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு தபால் வாக்கு செலுத்தி வருகின்றனர்.

News April 16, 2024

வாகனங்களில் GPS கருவி பொருத்தும் பணி 

image

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாகனங்களில் GPS கருவி பொருத்தும் பணி, மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவந்ததை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, இன்று (16.04.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News April 16, 2024

திருப்பத்தூர்: 3 நாட்களுக்கு விடுமுறை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழக கட்டுப்பாட்டில் இயங்கும் மதுபான சில்லறை விற்பனை கடையில் அனைத்தும் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள மதுபானக்கடைகள் அனைத்தும் ஏப்.17 முதல் 19ஆம் தேதி வரை 3 நாட்கள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், மக்களவை தேர்தலையொட்டி மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News April 16, 2024

1.5 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர்

image

தேனி, ஆண்டிபட்டியில் இந்தியாவில் பல கிராமங்களில் இன்னும் பேருந்து வசதி மின்சார வசதி கூட இல்லாத சூழ்நிலையில் தமிழக முதல்வர் கொண்டு வந்த திட்டம் தான் மக்களை தேடி மருத்துவம் திட்டம்; இத்திட்டத்தால் 1.5 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர்.  இது போன்ற மக்களுக்கு மகத்தான திட்டங்களை கொண்டு வரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.ஸ

News April 16, 2024

தர்மபுரி: நீச்சல் குளத்தில் குதூகலம்

image

தர்மபுரி,செந்தில் நகரை அடுத்துள்ள ராஜாஜி நீச்சல்குளம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பாக நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது இந்த நீச்சல் குளத்தின் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை குதூகலமாக குளித்து வருகின்றனர் தர்மபுரியில் நாளைக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இன்று வெயிலின் தாக்கம் 12 டிகிரி அதிகரித்துள்ளதால் வெயிலின் தாக்கம் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

News April 16, 2024

ஈரோடு: 75 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு, ஈரோட்டில் சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்று வாக்களிக்க 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, ஈரோட்டில் இருந்து நாளை (17ஆம் தேதி) மற்றும் 18ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நாமக்கல், கரூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை, போன்ற ஊர்களுக்கு 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் சொர்ணலதா தெரிவித்துள்ளார்.

News April 16, 2024

நாமக்கல்: தங்கள் துறைகளில் சிறந்து விளங்க வேண்டும்

image

நாமக்கல் பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரியின் 3வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரியில் நடைபெற்றது.பிஜிபி கல்வி குழுமத்தின் தாளாளர் கணபதி தலைவர் பழனி ஜி. பெரியசாமி ஆகியோர் உரையாற்றினர்.தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அபூர்வா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வேளாண் பட்டதாரிகளுக்கு விருதுகள் பட்டங்களை வழங்கி பேசும்போது, அவரவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறந்து விளங்க வேண்டும் என்றார்.

News April 16, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் எதிர்வரும் நாட்களில் கோடை வெயில் முன்பு இருந்ததை விட அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளார். மேலும் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட வேண்டும் எனவும் ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!