Tamilnadu

News April 10, 2024

200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

ரம்ஜான் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சார்பில், 200 சிறப்பு பேருந்துகள் இன்று முதல்
ஏப்ரல் 15ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார். அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம், இணையதளம் மற்றும் செயலி மூலம் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

News April 10, 2024

துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு

image

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட நக்கசேலம் பகுதியில் (ஏப்ரல் 9) நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவின் பேரில், மத்திய துணை காவல் படையினர் மாவட்ட காவலர்களுடன் இணைந்து கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தினர்.

News April 10, 2024

குமரி: பெண் ஒருவர் திடீர் தர்ணா போராட்டம்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று திடீரென பெண் ஒருவர் முகத்தை துப்பட்டாவால் மூடிக் கொண்டு எனக்கு நீதி வேண்டும் என கூறி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் பெண்ணிடம் கேட்டதற்கு கலெக்டர் நேரில் என்னிடம் வந்து கேட்டால் தான் கூறுவேன் என அடம்பிடித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News April 10, 2024

வடை சுட்டு கொடுத்து வாக்கு சேகரித்த எம்எல்ஏ

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தாயார் அம்மன் குளம் அருகே உள்ள அண்ணா பூங்காவில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், திமுக வேட்பாளர் செல்வம் அவர்களை ஆதரித்து நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சாலையோர வடை கடையில் வடை போட்டு கொடுத்து நூதன முறையில் உதய சூரியன் சின்னத்தில் பொதுமக்கள் வாக்களித்து வெற்றி பெற கோரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

News April 10, 2024

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

image

பாலக்கோடு கிழக்கு ஒன்றியத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பாமகவில் இருந்து 25க்கும் மேற்பட்டோர் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி EX.MLA அவர்களின் தலைமையில் திமுகவில் இணைந்து கொண்டனர். அப்போது, தர்மபுரி தொகுதி திமுக பார்வையாளர் த.ஆ.கா தருண் மற்றும் கட்சியினர் பலர் உடனிருந்தனர்.

News April 10, 2024

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 25 கேமராக்கள்

image

தஞ்சாவூர் மாவட்ட எல்லையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள காஞ்சிவாய் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்ட எல்லையான எஸ். புதூரிலிருந்து காஞ்சிவாய் வரையிலான பகுதியில் 25 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிறுத்தை குறித்து அச்சுறுத்தும் வகையில் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News April 10, 2024

திருப்பூரில் ரம்ஜான் பண்டிகை: சிறப்பு தொழுகை

image

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாத நடைபெற்று வருவதை முன்னிட்டு நேற்று இரவு பிறை தெரிந்ததாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் ஜாக் அமைப்பினர் இன்று ரம்ஜான் பண்டிகை என அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள மைதானத்தில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

News April 10, 2024

ரயில் பயணிகளின் கவனத்திற்கு

image

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை சென்டிரல்- கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் நாளை(11.04.24) ஞாயிறு கால அட்டவணையின்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், பயணிகள் முன்பதிவு மையங்கள் ஞாயிறு கால அட்டவணைப்படி (காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை) பகுதி நேரம் மட்டுமே செயல்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

News April 10, 2024

வேட்பாளர்கள் சின்னம் பொருத்தும் பணி

image

பாராளுமன்றத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலையில் திண்டுக்கல் மேற்கு தாசில்தார் வில்சன் மேற்பார்வையில் நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.

News April 10, 2024

ஈரோடு : தேர்தல் புறக்கணிப்பு பேனரால் பரபரப்பு

image

ஈரோடு அருகே சூரம்பட்ட, திரு.வி.க. வீதியில் டாஸ்மாக் கடை (கடை எண் : 3561) உள்ளது. இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடையை கண்டித்தும், டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தியும் அப்பகுதியினர் அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே இதனை கண்டித்து வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதியில் மக்கள் பேனர் வைத்துள்ளனர்.

error: Content is protected !!