India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே மயிலாடும்பாறையில் நேற்று ஹிந்து முன்னணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேனி வடக்கு மாவட்டம் கடமலை மயிலை ஒன்றிய பொறுப்பாளர்கள பங்கேற்ற இந்த கூட்டத்தில் இந்து முன்ணனி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசனை நிகழ்த்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயற்குழு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்

இராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக கீழக்காஞ்சிரங்குளம், எட்டிச்சேரி, கடமங்குளம், ஆத்திகுளம், நல்லூர், கீரனூர், வைத்தியனேந்தல் ஆகிய பகுதிகளில் அமமுக முதுகுளத்தூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் முருகன் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர். உடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கோவை வழியாக செல்லும் கேரள ரயில்கள் போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்தான செய்தி குறிப்பில், மார்ச் 26, 28, 30 ஆம் தேதிகளில் பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக ஆலப்புழா – தன்பாத் விரைவு ரயில், எர்ணாகுளம் – பெங்களூரு விரைவு ரயில் போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில்கள் கோவை ரயில் நிலையம் வருவது தவிர்க்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காயாமொழி அருகே உள்ள தண்டப்பத்தில் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசினார் இது சம்பந்தமாக பாஜகவினர் தேர்தல் அதிகாரியிடம் அளித்த புகாரியின் அடிப்படையில் மெய்ஞானபுரம் போலீசார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 294/B யில் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பழனி பங்குனி உத்திரத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். முத்துக்குமாரசாமி-வள்ளி தெய்வயானை சமேதராக தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தில் பழனி கோவில் இணைஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ்!; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அத்திமலைப்பட்டு மலைகளில் காட்டுத் தீ பரவி எரிந்து வருகிறது. 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட மலைப்பகுதி புகை மண்டலம் போல் காட்சியளிக்கிறது. மேலும், இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் தடத்தில் இன்று (மார்ச்-24) சிக்னல் கோளாறு ஏற்ப்பட்டுள்ளது.
அதன் காரணமாக சிங்கபெருமாள்கோயில் ரயில்வே கேட் லாக் அநாதல் இரயில்வே கேட்டை கடக்கமுடியாமல் இருபுறமும் ஆங்காங்கே வாகனங்கள் தேங்கி நின்று போக்கு
வரத்து பாதிப்பு ஏற்ப்பட்டு மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

அயோத்தியாப்பட்டணம் ராமலிங்கபுரத்தில் ஏவிஎஸ் தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற தொழில்நுட்பத் திருவிழாவில் பங்கேற்ற இளைஞர்கள், பைக்கில் ஸ்டண்ட் அடித்து பல்வேறு சாகசங்களை செய்து காட்டி, பார்வையாளர்களை மிரள வைத்து அசத்தினர். இந்த இளைஞர்களுக்கு பள்ளி தலைவர் ராஜவிநாயகம் , முதல்வர் முனைவர் சீனிவாசன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. அதன்படி நிர்மலா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை கோவை தேர்தல் நடத்தும் அலுவலரான கிராந்திகுமார் இன்று (மார்ச்.24) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் தாெகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் நாளை காலை 11- மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வேட்பு மனு செய்வதாக அறிவித்துள்ளார். இதற்கு ஆதரவாளர்களை தாடிக்கொம்பு சாலையில் உள்ள அஞ்சலி ரவுண்டானா அருகில் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.