India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரியில் 34 வேட்பாளர்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்கள். புதுச்சேரி மக்களவை தொகுதிக்கு பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் கட்சி சார்பில் வைத்திலிங்கம் எம்.பி உட்பட 34 வேட்பாளர்கள் 45 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக புதுச்சேரி தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல் தெரிவித்தார்.

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் அதிமுக பாஜக நாம் தமிழர் உள்ளிட்ட பிரதான கட்சிகள் பெண் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளனர். இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தாரகை கத்பர்ட் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு திருப்பூர் சாலையில் உள்ள ஆர் கே ஆர் குரு வித்யா மேல்நிலைப்பள்ளி நீட் தேர்வு பயிற்சி மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், காலை 9 மணி முதல் மாலை 4:30 மணி வரை அந்தந்த பாடங்களில் சிறப்பான ஆசிரியர்கள் வாயிலாக பயிற்சி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங். வேட்பாளர் விஜய் வசந்த் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வழக்கறிஞர் மகேஷ், கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த செல்லசாமி காங்கிரஸ் சட்டக் சபை கட்சித் தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எண்ணூர் காமராஜர் நகர் பகுதியில் பழமை வாய்ந்த வட திருச்செந்தூர் திருமுருகன் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது யாகசாலை அமைத்து கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்து முருகன் மற்றும் வள்ளி தெய்வானை சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. எண்ணூர் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று துவங்கி ஏப்ரல் 8 வரை நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை விருதுநகர் சிவகாசி இரு கல்வி மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற தமிழ் தேர்வில் 22,005 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். ஆனால் 10,589 மாணவர்கள் 10,924 மாணவிகள் என 21,513 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 492 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

திருச்சி ஜங்ஷன் கல்லுக்குழி அருகே உள்ள ரயில்வே விளையாட்டு மைதான ஸ்டேடியத்தில், ரயில்வே ஊழியர்களுக்கான மாபெரும் வாலிபால் சாம்பியன்ஷிப் (ஆண்கள்) போட்டி இன்று நடைபெற்றது. இதனை திருச்சி ரயில்வே கோட்டத் துணை மேலாளர் செல்வன் தொடங்கி வைத்தார். இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட ஆறு மண்டல ரயில்வே ஊழியர்கள் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை நகர் பகுதியில் இன்று அதிமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது இந்த நிலையில் புதுக்கோட்டை நகரில் அதிமுகவினர் கோவில்பட்டி, திருக்கோகர்ணம் பகுதிகளில் மகளிர் அணி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆதரவாக வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

நாமக்கல் லோக்சபா தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக வருமான வரித்துறை அதிகாரி அர்ஜூன் பேனர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் நாமக்கல் நகருக்கு வந்து தேர்தல் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.தேர்தல் பார்வையாளர்களுடன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் ஆகியோர் இன்று 27.03.2024 ஆலோசனை நடத்தினார்கள்.

மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் களைகட்ட தொடங்கிய நிலையில் தற்போது அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் பாபு மாவட்டத்தின் சமனிலை பகுதியான கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார். முன்னதாக கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் வழிபட்டு அப்பகுதியில் உள்ள மீனவர்களிடம் வாக்கு சேகரித்தார்.
Sorry, no posts matched your criteria.