India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் உமா தலைமையில் இன்று(27.03.2024) ஏப்ரல் 19 பாராளுமன்றத் தேர்தலில் 100 ஓட்டுப்பதிவு செய்வதை வலியுறுத்தும் வகையில் பொதுப்பார்வையாளர் செல்வி ஹர்ஜித் கவுர் இ.ஆ.ப தேர்தல் செலவினப்பார்வையாளர் அர்ஜுன் பானர்ஜி ஆகியோர் முன்னிலையில் நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடற்கல்வித்துறை சார்பில் இன்று தடகள விளையாட்டுப் போட்டிகளை பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு விளையாட்டு மைதானத்தில் துவக்கி வைத்தார். உடற்கல்வி தலைவர் ராஜசேகரன் தலைமை உரையாற்றினார் பல்கலைக்கழக அனைத்து துறை சார்ந்த மாணவ மாணவிகள் ஒலிம்பிக் சுடரை ஏந்தி தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டனர். நாளை போட்டியில் வென்றவருக்கு துணைவேந்தர் தலைமையில் பரிசு வழங்கப்படும்.

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் இருந்து மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட 100% வாக்கு பதிவு விழிப்புணர்வு பேரணியை இன்று (27.03.2024) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் கூடுதல் ஆட்சியர் ரிஷப், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள ஊரீஸ் கல்லூரி அருகே விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலட்சுமி இன்று (மார்ச் 27) கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பகுதியில் கடந்த முறை வாக்கு சதவீதம் குறைந்த பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் என்ற நேரில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தாமதமாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரே காரணம் என விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபகாரன் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் வென்ற தொகுதி என்பதால் பாஜக கண்டுக்கொள்ளாது. பொது வேட்பாளராக நான் வென்ற பின், அதை எப்படி வாங்குவது என்று எங்களுக்கு தெரியும் என தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலின் வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள் ஆகும். எனவே புதுச்சேரியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் வைத்திலிங்கம் இன்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்கட்சி தலைவர் சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும், வேட்பாளர் தமிழ்மணி உருவம் பொறித்த போஸ்டர்கள் அதிக அளவு இரண்டு தினங்களாக ஒட்டப்பட்டுள்ளது. இது நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக ஒட்டப்பட்டுள்ளதாகவும் , இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு புகார்களை அனுப்பி வருகின்றனர்…

2024 சேலம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நா.அண்ணாதுரை தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தாதேவியிடம் இன்று தாக்கல் செய்தார். இதில் சேலம் நாடாளுமன்ற பொறுப்பாளர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சி பகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சியில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிக்க பொதுமக்களுக்கு வருவாய் துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இதில் குன்னூர் வட்டாட்சியர் கனி சுந்தரம் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.