India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சியில் பல்வேறு அதிமுக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் தங்கமணி இன்று திருச்சி வந்தார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள், விஜயபாஸ்கர், பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மற்றும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக அதிமுக, மதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, உட்பட சுயேச்சை வேட்பாளர்கள் மொத்தம் 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில், 10 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, மீதமுள்ள 38 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் இன்று காலை காலமானார். இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை வட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

துறையூரில் இன்று மாலை பாலக்கரை கலைஞர் திடலில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு திமுக வேட்பாளர் அருண் நேருவிற்கு வாக்குகள் சேகரித்தார்.
அப்போது தேர்தல் ஆணையம் மோடியின் உத்தரவுக்கு செயல்படுகிறதா? தேர்தல் ஜனநாயக முறையில் நடக்குமா? என கேள்வி எழுப்பினார்.

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சட்டமன்ற தொகுதிக்கு 9 குழுக்கள் கண்காணிக்கபடுகிறது . இந்த நிலையில் மொத்தமாக திருச்சி மாவட்டத்தில் மட்டும் அதிகமாக போதைப்பொருள் பிடிபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லோக்சபா தேர்தல் காரணமாக தேர்தல் விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவை இன்று வரை வரும் போதை பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட தாக்கல், செய்யபட்ட வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் உமா முன்னிலையில் நடைபெற்றது. இதில், நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 41 வேட்பாளர்கள் பட்டியலை மாவட்ட ஆட்சியர் உமா இன்று மாலை. வெளியிட்டுள்ளார்.

ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஒன்றிய செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் பெருந்துறை தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசும் போது மண்வெட்டியால் துண்டான போதிலும் இரண்டு துண்டுகளும் தனித்தனி புழுவாகி அதற்கு உண்டான வேலையை செய்வது போல் நமது கட்சி நிர்வாகிகள் அனைவரும் வேட்பாளரின் வெற்றிக்காக செயல்படுவார்கள் என்றார்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் கனிமொழி எம்பி வேட்பாளராக போட்டியிடுகின்றார். இவரை ஆதரித்து இன்று இரவு சமூக நலத்துறை அமைச்சருக்கு கீதா ஜீவன் முத்தையாபுரம் முள்ளக்காடு பொட்டல்காடு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக அரசின் சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார்.

புதுக்கோட்டை, அறந்தாங்கியை அடுத்த திருவாப்பாடியில் உள்ள ஏரியில் அப்பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் சடலம் 27 ஆம் தேதி காலை கண்டெடுக்கப்பட்டது. விக்னேஷ் மரணத்திற்கு அறந்தாங்கி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பெரியசாமியின் மகன் தமிழ்வேந்தன் , அவரது நண்பர் யோகேஸ்வரன் ஆகியோர்தான் காரணம் எனக் கூறிய அவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருவப்பாடியில் விக்னேஷின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Sorry, no posts matched your criteria.