India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆண்டிப்பட்டி வ.அண்ணாநகர் அருகே இன்று (மார்.22) மாலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியே வந்த கார் ஒன்றினை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.82,480 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை, பறிமுதல் செய்த பறக்கும் படையினர் பணத்தினை சார் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளதாக தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் ஷஜீவனா அறிவித்துள்ளார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் தொடர்பாக பொதுமக்கள் அனைவரும் 100% வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா திருநங்கைகள் தபால் அட்டை மூலம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரி ஆளுனராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் பதவி ராஜினாமா செய்தியை தொடர்ந்து இன்று ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் புதுச்சேரி துணைநிலை பொறுப்பு ஆளுநராக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து பதவி ஏற்றுக்கொண்டார். இதில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மக்களவை பொதுத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் கிராமப் பகுதிகளில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம்கள், சிறப்பு முகாம்கள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

காங்கேயம் பகுதிக்கு உட்பட்ட திருப்பூர் சாலை காந்தி நகரில் வசித்து வருபவர் வெங்கடாசலம். இவர் காங்கேயத்தில் உள்ள ஒரு கம்பெனியில் சாக்கு தைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில், இவர் நேற்று மாலை மருந்து வாங்க சென்றபோது எதிர்பாராத விதமாக லாரியின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருநெல்வேலியில் பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் உயர்மட்ட நிர்வாக குழு கூட்டம் இன்று (மார்ச் 22) கூடியது. இந்த கூட்டத்திற்கு பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் பவானி வேல்முருகன் தலைமை தாங்கினார். இதில் கடந்த வாரம் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசுவிடன் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து இதுவரை எந்த பதிலும் வராதது குறித்து மறுபரிசீலனை செய்யப்பட்டது.

பூந்தமல்லி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, மும்பையை சேர்ந்த வேணுகோபால் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ₹13, 84, 684 பணத்தை பறிமுதல் செய்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளும்படி தெரிவித்தனர். பின்னர் பூந்தமல்லி அரசு கருவூலத்தில் இந்த பணம் ஒப்படைக்கப்பட்டது.

கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுனர் சர்மிளாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. பெண் காவலர் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவதூறாக பரப்பி வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுனர் சர்மிளா மீது மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிய ஓட்டுனர் சர்மிளாவிற்கு நீதிமன்றம் இன்ற முன் ஜாமீன் வழங்கியது.

2024 மக்களவைத் தேர்தலில், 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வகையில் 32,594 வாக்காளர்கள் கண்டறியப்பட்டு 26,508 வாக்காளர்களுக்கு விருப்பப் படிவம் (Form 12D) வழங்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா; பட்டிவீரன்பட்டியில் பிறந்து சிவகாசியில் வசித்து வருகிறார். கணவர் இருதய சிகிச்சை மருத்துவர். மகன்களும் மருத்துவர்கள், 3-சிறுகதை தொகுப்புகள்,11- கவிதை தொகுப்புகள், 2 வரலாறு தொகுப்புகள் எழுதியுள்ளார். மது ஒழிப்பு போராட்டம், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.