Tamilnadu

News April 1, 2024

புதுக்கோட்டையில் காவல்துறை அணிவகுப்பு!

image

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்ற காவல்துறை அணிவகுப்பை நகரக்காவல் துணைக்கண்காணிப்பாளர் ராகவி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மேலராஜவீதி வழியாக வந்த இந்த அணிவகுப்பு ஊர்வலம் நகர்மன்றத்தில் நிறைவடைந்தது. இதில் நகரக்காவல் நிலைய காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் இதில் பங்கேற்றனர். இதே போல அறந்தாங்கியிலும் நேற்று காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றது.

News April 1, 2024

பறக்கும் படையினர் பணம் பறிமுதல்

image

அரக்கோணம் அடுத்த பள்ளூர் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த அலுவலர் சுந்தரம் மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் கல்லூரி மாணவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.68,400 கொண்டு சென்றது தெரிந்தது. பறக்கும் படையினர் அந்த பணத்தை அரக்கோணம் வட்டாட்சியர் செல்வியிடம் ஒப்படைத்தனர். 

News April 1, 2024

பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி வாக்கு சேகரிப்பு

image

கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் இன்று தர்மபுரி பாராளுமன்ற பா.ம.க வேட்பாளர் செளமியா 2.30 மணிக்கு தேர்தல் பரப்புரை மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். அவர் மணியம்பாடி, போசி நாயக்கனஅள்ளி, வேடியூர், லிங்கநாயக்கை அள்ளி வெ, புதூர் கடத்தூர் பேரூராட்சி, நல்லநாகு அள்ளி முத்தனூர் அஸ்தகிரியூர் புது ரெட்டியூர் ஆகிய பகுதிகளிலிருந்து பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

News April 1, 2024

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை தேர்தல் பிரச்சாரம்

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயப்பெருமாள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (மார்ச் 31) பரமக்குடியில் நடிகை விந்தியா ஜெயப்பெருமாளை ஆதரித்து பரமக்குடி பேருந்து நிலையம் முன்பாக இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்தி முனியசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

News April 1, 2024

மயிலாடுதுறை:முதலமைச்சரை விமர்சித்த எதிர்கட்சி தலைவர்

image

மயிலாடுதுறையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரச்சார உரையாற்றினார். அப்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்டம் நாங்கள் அமைத்து தந்தோம் எனவும் , ஆனால் நாங்கள் பெற்றெடுத்த பிள்ளைக்கு மு.க.ஸ்டாலின் பெயர் வைத்துள்ளார் என்றும் விமர்சித்தார்‌.

News April 1, 2024

தங்க தமிழ்ச்செல்வனை பற்றி பேசிய டிடிவி மனைவி

image

 டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பெரியகுளம் ஒன்றிய பகுதிகளில் அவரது மனைவி அனுராதா நேற்று (மார்.31) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தான் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. தனது கணவருக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். தங்க தமிழ்ச்செல்வனை தனது சகோதரனாக பார்க்கிறேன் என அவர் தெரிவித்தார்.

News April 1, 2024

திருவள்ளூர்: தேர்தல் பணிமனை திறப்பு

image

கடம்பத்தூர் மேற்கு ஒன்றியம் மப்பேடு கூட்டுச்சாலையில் திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்காக தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் பணிமனையை நேற்று இரவு திறந்து வைத்தார் எம்எல்ஏ ராஜேந்திரன். உடன் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் உட்பட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

News April 1, 2024

அரியலூர் அருகே தொழிலாளியை தாக்கியவர் கைது

image

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் தெற்கு தெருவை சேர்ந்த தேவராஜ் மகன் ரவி, சிவக்குமார் மகன் வல்லரசு. இவர்களிடையே முன்விரோத தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற ரவியை, வல்லரசு தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரவி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 1, 2024

நெல்லை: ஜேசிபி திருடியவர் கைது

image

காந்திஸ்வரன் புதூரை சேர்ந்தவர் இசக்கி பாண்டி. இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் ஜேசிபி வைத்து ஒப்பந்த அடிப்படையில் பணி செய்கிறார். இவரது ஜேசிபி திடீரென திருடுபோனது. இது குறித்து இவர் அளித்த புகாரின்படி கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி வழக்குப்பதிந்து தென்காசி மாவட்டம் சுரண்டை துவரங்காடு பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரை நேற்று (மார்ச் 31) கைது செய்தார். ஜேசிபியை பறிமுதல் செய்தார்.

News April 1, 2024

நீலகிரி பாஜக வேட்பாளர் வாகனத்தில் அதிமுக கொடி

image

நீலகிரி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று உதகை நகரம் குந்தா பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் அவரது பிரச்சார வாகனத்தில் பாஜக கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் கட்டியிருந்தன. அதில் அதிமுக கொடி இடம் பெற்றிருந்தது. இது குறித்து வேட்பாளர் எல்.முருகன் கவனத்திற்கு வந்தது. அதன் பிறகு அதிமுக கொடி கழற்றப்பட்டது.

error: Content is protected !!