India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அநீதிக்கும், நீதிக்கு புறம்பாக யாரெல்லாம் நடக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக நான் விஸ்வரூபம் எடுப்பேன் என மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் ராமநாதபுரம் மக்கள் நீதியின் படியும் , தர்மத்தின் படியும் தீர்ப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையோடு அங்கு போட்டியிடுவதாக அவர் தெரிவித்தார்.

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 4ம் கட்ட பட்டியல் சற்றுமுன் வெளியானது. இதில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 14 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரி, வடசேரியை சேர்ந்தவர் கார்த்திக்(28). இவர் ஒழுகினசேரியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு பெரியவிளையை சேர்ந்த சுகுமாரன்(29) என்பவர் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய வந்தார். அப்போது அவர்கள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சுகுமாரன் கத்தியை எடுத்து கார்த்திக்கை குத்தியதில் அவர் படுகாயமடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரன்கோவில் கோமதி சங்கர் காலனியை சேர்ந்தவரான டாக்டர் ராணி ஸ்ரீகுமார், அரசு மருத்துவராக உள்ளார். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராகப் பணியாற்றி வரும் இவர், 2024 மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் தி.மு.க சார்பில் வேட்பாளராக களமிறங்க உள்ளார். இவரின் கணவர் ஸ்ரீகுமார் தி.மு.க விவசாய அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட காங் கமிட்டி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. கருமாணிக்கம் எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டி முன்னிலை வகித்தார். திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வாக்கு சேகரித்து பேசினார். மாவட்ட காங் பொறுப்பாளர்கள் செல்லத்துரை அப்துல்லா, ராஜாராம் பாண்டியன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி பேசினர்.

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முரசொலி இன்று காலை மன்னார்குடி நகர திமுக அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது அவரை நகர் செயலாளர் வீரா கணேசன், நகரமன்ற தலைவர் சோழராஜன் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர ஒன்றிய செயலாளர்கள் நிர்வாகிகள் வரவேற்பளித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

அதிமுக சார்பில் போட்டியிடும் சுர்ஜித் சங்கர் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதாபேராலய பகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் ஒன்றிய செயலாளர்கள் வேதையன் , பாலை. செல்வராஜ், நகர செயலாளர் சாம்சங், தங்கக் கதிரவன் நகர பொருளாளர் இளையதாஸ் பங்கேற்றனர்.

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் அதிமுக ஐடி விங் மாநில தலைவர் சிங்கை இராமச்சந்திரன், பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இங்கு அதிமுக, திமுக, பாஜக நேரடியாக மோதுவதால் கோவை ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது. உங்கள் கருத்து என்ன மக்களே?

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும்,தேர்தல் அலுவலருமான பிரதீப் குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுயது:திருச்சியில் 2547 வாக்குச்சாவடி மையம் உள்ளது.3053 வாக்குப்பதிவு இயந்திரம்,3053 கட்டுப்பாட்டு கருவிகள்,3037 விவிபேட் உள்ளன.மண்டல அலுவலர்களுக்கு நாளை பயிற்சி வழங்கப்படுகிறது. திருச்சியில் நேற்று மாலை வரை ரூ.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இன்று காலை ரூ15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதையொட்டி அவருக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என அக்கட்சியின் செயல் தலைவர் ரவிக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.