India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வரும் ஏப்ரல் 19, 2024 அன்று நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் 100சதவீதம் வாக்குகள் பதிவாக வேண்டும் என்ற நோக்கில் நாமக்கல் மாவட்ட வருவாய்த் துறையும், நாமக்கல் – டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வாக்காளர் விழிப்புணர்வு மையமும் இணைந்து ‘வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி ‘யினை கல்லூரி வளாகத்தில் 26/03/24 நடத்தியது.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு இன்று (மார்ச் 25) தொடங்கியது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள முஸ்லிம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

மயிலாடுதுறையில் பாராளுமன்ற தொகுதிக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக பாமக தமிழ் மாநில காங்கிரஸ் அமமுக தமாக புதிய நிதி கட்சி இந்திய ஜனநாயக கட்சி தமிழர் தேசம் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டனர்.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் உள்ள பெரியார் அரசு கலை கல்லூரி கடலூர் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்கு என்னும் மையத்தினை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த மையத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் உடனடியாக அமைக்க வலியுறுத்தினார்.

நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் நேற்று (மார்ச் 25) வரை 6 பேர் நீலகிரி ஆட்சியரிடம் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். அதன் விவரம் வருமாறு: பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் டாக்டர் எல்.முருகன், அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன், வையாபுரி, முருகேசன், பத்திரன், ராஜேந்திரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

2024ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று காலை காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவியர்கள் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை குடிநீர் வாரியத்துக்கு, நிகழாண்டின் 2ம் அரையாண்டுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியை மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டணங்களை செலுத்த ஏதுவாக, வரும் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 31) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை அனைத்து வசூல் மையங்களும் செயல்படும் என சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி, சில்லப்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி நாகஜோதி(37). இவர் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பூங்கொடியிடம் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனுவை வழங்கினார்.

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் எஸ்டிபிஐ, வேட்பாளர்கள் முகமது முபாரக் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் பெயரில் ரூ.4.54 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள், ரூ.4.50 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள், தனது மனைவி பெயரில் ரூ.6.28 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில், 16,348 மாணவர்களும், 16,583 மாணவியரும் என மொத்தம், 32,931 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். இவர்கள் 138 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவதால் தேர்வு மையங்களில், மாணவர்களுக்கு தேர்வு எழுவதற்கு மேஜைகளில் பதிவெண்கள் எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.