India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, கிருஷ்ணகிரியில் வீரப்பனின் மகள் வித்யா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபட விருப்பமுள்ள விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரா்கள், படைவீரர் நல உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு அசல் படைப்பணிச் சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் சென்று, தங்களது பெயரை பதிவு செய்துகொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04146-220524 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நேற்று (மார்ச் 23) செய்தி வெளியிட்டுள்ளார்.

மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பாபு இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளிடம் நோட்டீஸ் வழங்கி இரட்டை இலை சின்னத்தில் தங்களது வாக்கினை செலுத்துமாறு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்தார். அப்போது ஏராளமான அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 1951 இல் உருவாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135-பி இன் கீழ் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் புதுவை பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் நாளை(25.3.2024) வேட்பு மனு தாக்கல் செய்கிறார். பாஜக, என்ஆர் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் (ம) தொண்டர்கள் கருவடிக்குப்பம் சித்தானந்த கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஆதரவாளர்கள் உடன் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி – மீஞ்சூர் ரயில் நிலையங்கள் இடையே, வரும் 25, 26, 27 ஆகிய நாட்களில் காலை 9:25 மணி முதல் 11:40 மணி வரை ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி மார்கத்தில் மூன்று நாட்களுக்கு, ஏழு மின்சார ரயில்களின் சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 1951 இல் உருவாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135-பி இன் கீழ் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.

அரக்கோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்தல் பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. இந்த தேர்தல் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் வளர்மதி திடீர் ஆய்வு செய்தார். அப்போது எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் மறு தேர்தலில் இருக்கக் கூடாது. எல்லா தகவல்களையும் தெளிவாக தேர்தல் பயிற்சி வகுப்பில் கற்றுக் கொள்ள வேண்டும். மறு தேர்தல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக மிகஅவசியம் என்றார்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 1951 இல் உருவாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135-பி இன் கீழ் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு, சித்தாமூர், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் மதுராந்தகம் மதுவிலக்கு போலீசார் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது வீடுகளில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர்கள்,அரசு அனுமதியின்றி பனைமரத்தில் கள் இறக்கி விற்பனை செய்தவர்கள் என 3 பெண்கள் உட்பட 14 பேரை மதுராந்தகம் மதுவிலக்கு போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 150 மதுபாட்டிகளை பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.