India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 22) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
திருச்சி, பஞ்சப்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் வரும் 25-ம் தேதி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி முகாம் நடைபெற உள்ளது. எனவே இதில் 12-ம் வகுப்பு பயின்ற உயர்கல்வியில் சேராத மாணவர்கள் கலந்து கொண்டு கல்வி கடன், உதவித்தொகை விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சரவணன் இன்று அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறை சார்பில், அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் உட்பட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு இந்த <
திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 22.08.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, அவினாசி, பல்லடம், ஊதியூர், செய்யூர், குன்னத்தூர், பெருமாநல்லூர், அவினாசிபாளையம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணிபுபவரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் இன்று ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற்றது இந்த குழுக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5 நிர்ணயம் செய்யப்பட்டது தொடர் மழை குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5ஆகவே நீடிக்கிறது
கரூர் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
கன்னியாகுமரி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை இனி எளிமையாக பெறலாம். அதற்கு eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!
கோவை, பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (ஆகஸ்ட்.22) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 22) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
கோவை நஞ்சுண்டாபுரம் கண்ணனை மிரட்டி பணம், செல்போன் பறித்த ஷாருக்கான் (22), கஞ்சா விற்ற ஈஸ்வரன் சையத் அலி (34), 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேனி சொக்கலிங்கம் (42) ஆகிய 3 பேரையும் போத்தனூர் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய செய்ய பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டு நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.