India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீநந்திகேஸ்வரர் மற்றும் ஈசனுக்கு பால், தயிர், சந்தனம், பழ வகைகள், வாசனை திரவியுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து, மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் ரிஷப வாகனத்தில் ஈசன் எழுந்தருளி உட்பிரகாரம் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கோயம்புத்தூர் – பருணி இடையே திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி சென்னை பெரம்பூர் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. வண்டி எண் 06059 கோவையில் இருந்து ஏப்.23 ம்தேதி பகல் 11.50க்கு புறப்படுகிறது இதேபோல் வண்டி எண் 06060 பருணியில் இருந்து 26ஆம் தேதி இரவு 11.45க்கு புறப்படுகிறது. ஜூன் 28ம் தேதி வரை சிறப்பு ரயில் இயங்கும்.

பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மலை மீது செல்லும் பக்தர்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வசதியாக புதிய ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கப்பட்டுள்ளது. நவீன மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் ஆம்புலன்ஸ் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக இன்று முதல் ஆம்புலன்ஸ் வாகனம் இயக்கப்படுகிறது.

காரைக்கால் மாவட்டத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பாஜக புதுச்சேரி நாடாளுமன்ற வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க மாநில துணை தலைவர் ராஜசேகர், மாவட்ட தலைவர் முருகதாஸ், மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், அதிமுக சேவியர்தாஸ், பாஜக தேவநாதன், உட்பட 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இது குறித்து அதிமுகவினர் கூறுகையில் ”திமுக மற்றும் கார்த்தி சிதம்பரம் மீதான அதிருப்தி வாக்குகள் எங்களுக்கு கிடைத்துள்ளன. சிலர் பிரிந்து சென்றாலும் எங்களது கட்சி வாக்குகள் சதவீதம் இதனால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலாவது வெற்றி பெறுவார் என்றனர்.

மன்னார்குடி நகரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், நீலகண்டர் கோயில், அண்ணாமலை நாதர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், சோழீஸ்வரர் கோயில், திருப்பாற்கடல் தெரு காசிவிஸ்வநாதர் கோயில் ஆகிய 8 கோயில்களில் இன்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியையும் பெருமானையும் வழிபட்டனர்.

நாமக்கல் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19.04.2024 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பதினான்கு லட்சத்து 52 ஆயிரத்து 562 வாக்காளர்கள் உள்ள நிலையில் அதில் 3 லட்சத்து 16 ஆயிரத்து 493 பேர் வாக்களிக்கவில்லை கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் 79.99,% வாக்குகள் பதிவான நிலையில் 2024 தேர்தலில் 78.21% வாக்குகள் பதிவாகியுள்ளன.

கீழ்வேளூர் வட்டம் கீழையூர் ஒன்றியம் பிரதாப ராமபுரத்தில் நேற்று பரமேஸ்வரி என்பவரின் கூரை வீடு எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. இதையடுத்து கீழையூர் ஒன்றிய திமுக செயலாளரும் வேளாங்கண்ணி பேரூராட்சி மன்றத் துணைத் தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன் சேதமடைந்த வீட்டினை இன்று மாலை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.

சென்னையில் இருந்து அழகர் கோவிலுக்கு வந்து, கள்ளழகர் மதுரைக்கு புறப்படும் நிகழ்வினை தரிசித்து விட்டு, மீண்டும் சென்னையை நோக்கி ஒரு குடும்பத்தினர் காரில் திரும்பி கொண்டிருந்தனர். மேலூர் நான்கு வழிச்சாலையில் சென்ற போது, கருங்காலக்குடி அருகே கம்பூரைச் சேர்ந்தவரின் கார் ஒன்று இந்த காரின் பின்புறமாக மோதியது. இதில் காரில் வந்த 5 பேர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜகவினர் வாக்குகள் மாயமாகி உள்ளது எனக் குற்றம்சாட்டினார். இதற்கு கோவை ஆட்சியர் இன்று விளக்கம் அளித்துள்ளார். கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு முறை வாக்காளர் பட்டியல் வெளியிடும் போதும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.