India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பல வாக்குறுதிகளை திமுக கோவைக்கு வழங்கி வந்துள்ளது. அதில், கோவையில் இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை வைத்து திமுக ஒரு புது தேர்தல் வாக்குறுதியை வழங்கி இருக்கிறது. அதன்படி, கோவை மெட்ரோ ரயில் சேவை விரைவில் செயல்படுத்தப்பட்டு அந்தத் திட்டம் திருப்பூர் வரை நீடிக்க வழி வேலை செய்யப்படும் என இன்று (ஏப்ரல்.09) கூறப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அண்ணாமலை (கோவை), மத்திய இணையமைச்சர் எல்.முருகன் (நீலகிரி), வசந்தராஜன் (பொள்ளாச்சி), ஏ.பி.முருகானந்தம் (திருப்பூர்) ஆகியோரை ஆதரித்து மேட்டுப்பாளையத்தில் நாளை (மார்ச்.10) நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இதற்கு 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில், கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறப்படும் வகையில் உள்ளது என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக நிர்வாகி இன்பதுரை இன்று புகாரளித்துள்ளார். அந்த புகாரில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் ராஜா, உதயநிதி மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் என்று கூறியுள்ளார்.

தோகைமலை அருகே உள்ள கொண்டம நாயக்கன்பட்டியில் மாடு மாலை தாண்டும் விழாவிற்கு பல மாவட்டங்களில் இருந்து 14 மந்தையர்கள் கலந்து கொண்டனர். எல்லை கோட்டை நோக்கி சுமார் 200 க்கும் மேற்பட்ட சலை எருது மாடுகள் ஓடி வந்தது. இதில், திருச்சி மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டி கோலக்கம்பிலி நாயக்கர் மந்தை சின்னக்காரி குழு மாடு முதலாவதாக ஓடி வந்து முதல் இடத்தை பிடித்தது. இதற்கு தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக மதுரையிலிருந்து ஏப்ரல் 17, 18ம் ஆகிய தேதிகளில் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு சராசரியாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 2000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக (09-04-24) அறிவிக்கப்பட்டுள்ளது.

கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி நோன்பு பெருநாள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரமலான் சிறப்பு தொழுகை (பிறை தெரிந்தவுடன்) பொதக்குடி நூரியா தெருவில் நூருல்லா நினைவு விளையாட்டு மைதானத்தில் காலை 7.15 மணிக்கும், சவுக்கத்தலி தெருவில் அமைந்துள்ள ஜன்னத்துல் பிர்தௌஸ் பள்ளிவாசலில் காலை 7 மணிக்கும், அப்துல்லா தெருவில் அமைந்துள்ள பாத்திமா பள்ளிவாசலில் காலை 6.45 மணிக்கும் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கட்சி தலைவர்களின் சிலைகள் மற்றும் கட்சி கொடிகள் துணிகளை வைத்து மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாணியம்பாடி நகர பகுதியில் அதிமுக சின்னம் இரட்டை இலை திறந்த நிலையில் இருப்பதால் அவற்றை மூட தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

திண்டுக்கல் முத்தனம்பட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பூங்கொடி, இன்றுநேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மக்களவை தொகுதியில் நாதக சார்பில் கார்மேகம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த சீமான், பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது, “தமிழ் மக்களிடையே அநீதி, லஞ்சம், ஊழல், இயற்கை சுரண்டல் ஆகியவற்றை சகித்துக் கொண்டதால் இங்கே அடிமை இனம் உருவாகி வருகிறது” என்றார்

புதுச்சேரி மீன்வளத்துறை சார்பு செயலர் புனிதமேரி வெளியிட்ட உத்தரவில், இந்திய அரசின் மீன்வள அமைச்சகத்தின் துணை ஆணையர் உத்தரவுப்படி மீன்வளத்தை பாதுகாத்திட கடந்த ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தியது போல், வரும் ஏப்ரல். 15 ஆம் தேதி முதல் ஜூன்.14 ஆம் தேதி வரை 61 நாட்கள் புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.