India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர் நகராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மக்களவைத் தேர்தல்-2024 ஐ முன்னிட்டு நேற்று (ஏப்ரல் 16) திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கான பசுமை வாக்குச்சாவடி மையம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலரும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருமான பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், குடைவரை கோவில்கள், ஒற்றைக்கல் ரதங்கள், புடைப்பு சிற்ப தொகுதிகள் உள்ளிட்ட கலைப் படைப்புகள், நரசிம்மவர்ம பல்லவர்களால் செதுக்கப்பட்டவை. இன்று(ஏப்.18) உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சுற்றுலா பயணிகள், பார்வையாளர்களுக்கு இன்று ஒருநாள் இலவசமாக பார்வையிடலாம் என மத்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மாலை நட்சத்திர கலை சங்கமம் நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் மழை நீர் முழுமையாக பயன்படுத்தப்பட வில்லை. நீர் வரத்து கால்வாய்கள் சரிவர பராமரிப்பில்லாதது , ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் கண்மாய், குளங்களுக்கு நீர் வரத்து போதிய அளவில் இல்லை. எனவே கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கான வரத்து கால்வாய்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்த தேர்தலில் தக்கலை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஜெஃபினோ நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாக குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு நேற்று(ஏப்.17) பொறுப்பேற்று கொண்டார். இவர் தக்கலை வடக்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வருகிறார். காங்கிரசார் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் நேற்று(ஏப்.17) மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், திடீரென முதல்வர் ஸ்டாலின் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்றார். சில மணி நேரத்திற்கு கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின், “ஆளாக்கிய தலைவரின் நினைவிடத்தில்..” என தனது ‘X’ தளத்தில் பதிவிட்டார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பேரணாம்பட்டு கோட்டை காலனியை சேர்ந்தவர் சரண்ராஜ் (35). இவர் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகிறார். இது தொடர்பாக சரண்ராஜ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி மணிவண்ணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் நேற்று (ஏப்ரல் 17) கலெக்டர் சுப்புலட்சுமி சரண்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

கோவையில் ரேஸ்கோா்ஸ் பகுதியில் ராமா் படத்துடன் தாமரை சின்னத்தை அச்சடித்து பொது மக்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருப்பதாக நேற்று பறக்கும் படையினருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து விரைந்து சென்ற பறக்கும் படையினர் பாஜகவினரிடமிருந்து தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட ராமா் படங்களை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரம் கேணிக்கரை சப் இன்ஸ்பெக்டர் சபிதா ஸ்ரீ தலைமையிலான போலீசார் பேராவூர் பகுதியில் ரோந்து சென்றபோது அப்பகுதியில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த கவரங்குளம் கொத்தன் மகன் கந்தசாமி (47), என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு முழுவதும் நாளை(ஏப்.19) மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை சென்ட்ரல் – பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஏப்.18ம் தேதி அதிகாலை 5.35 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு பெங்களூருவுக்கும், பெங்களூருவின் ஒயிட்பீல்டு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் சென்ட்ரலுக்கு இரவு 7 மணிக்கு வந்தடையும் என தெற்கே ரயில்வே தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி போலீஸ் எஸ்ஐ சிவக்குமார் மற்றும் போலீசார் சிங்கிரிப்பள்ளி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கு சூதாடிக் கொண்டிருந்தவர்களைச் சுற்றி வளைத்து விசாரித்தனர். அவர்கள் பெருமாள் (40), நாகராஜ் (35), சண்முகம் எனத் தெரிந்தது. அவர்களை கைதுசெய்து பணம் மற்றும் 3 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.