Tamilnadu

News May 4, 2024

எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை

image

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (மே.4) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் தவறுகளை சமரசம் இன்றி சுட்டிக் காட்டும் சவுக்கு மீடியா மற்றும் அதன் ஊழியர்கள், செய்தியாளர்கள் மீதான வழக்குகளும், தொடர்ச்சியான கைதுகளும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News May 4, 2024

வேளாங்கண்ணி கடற்கரையில் ஆண் பிணம்

image

வேளாங்கண்ணி கடற்கரை ஓரத்தில் நேற்று மாலை ஆண் பிணம் கிடப்பதாக கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வேளாங்கண்ணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் அங்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 53 வயது மதிக்கதக்க அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 4, 2024

குடிநீா் விநியோக ஏற்பாடுகள்: புதுகை ஆட்சியா் ஆய்வு

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோடைக்கால குடிநீா் விநியோகப் பணிகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஐ.சா.மொ்சி ரம்யா வெள்ளிக்கிழமை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இயல்பைவிடவும் அதிக வெயில் அடித்து வருவதால் நீா்நிலைகளில் தண்ணீா் இருப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. அதனை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.

News May 4, 2024

திண்டுக்கல் அருகே மின்வேலியில் சிக்கி யானை பலி

image

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வன சரகத்துக்குட்பட்ட தோனி மலை பகுதியில் இன்று (04.05.2024) தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலியானது. இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தனியார் தோட்டத்தின் உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறனர்.

News May 4, 2024

ஜெயக்குமார் மரணம்: ரூபி மனோகரன் பரபரப்பு பேட்டி

image

காங்கிரஸ் கட்சி பொருளாளர் ரூபி மனோகரன் எம்எல்ஏ இன்று (மே.4) செய்தியாளர்களிடம் கூறியதாவது, மறைந்த ஜெயக்குமார் தனசிங் தனது நெருங்கிய நண்பர் கட்சிக்காக தீவிரமாக உழைத்தவர். அவரது விவகாரத்தில் தன்னை தொடர்பு படுத்துவதில் எந்த உண்மையும் இல்லை. பின்புலத்தில் யாரோ செயல்படுகின்றனர். காவல்துறை உண்மையை கண்டறியும் என வலியுறுத்தியுள்ளார்.

News May 4, 2024

மயிலாடுதுறையில் சிறப்பு கூட்டம்

image

மயிலாடுதுறையில் ரோட்டரி கிளப் ஆப் டெல்டாவின் சிறப்பு கூட்டம் யூனியன் கிளப்பில் இன்று நடைபெற்றது. தொடர்ந்து தலைவர் சங்கர் கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பொறுப்பாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகள் இந்த கூட்டத்தில் வழங்கப்பட்டது.

News May 4, 2024

நீலகிரியில் நிரம்பி வழியும் விடுதிகள்

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், குந்தா, ஊட்டி, கூடலூர், பந்தலூர், கோத்தகிரி, கோடநாடு மற்றும் வன பகுதி ஓரங்களில் என 100 க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் கூடுதலாக உள்ளது. எனவே கோடை விழாவுக்கு முன்பாகவே விடுதிகள் முன்பதிவு செய்யபட்டு நிரம்பி வழிகின்றன.

News May 4, 2024

கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிவு

image

போடி பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் போடி புதூரைச் சோ்ந்த மது என்பவரிடம் கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில், கொடுத்த கடனை திரும்பக் கேட்டு மது, முத்துப்பாண்டியை சாவியால் குத்தியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதில், காயமடைந்த முத்துப்பாண்டி போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இது குறித்து போலீஸாா் மது மீது நேற்று (மே.3) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News May 4, 2024

ராமநாதபுரம் வில்லூண்டி தீர்த்தம் சிறப்பு!

image

ராமேஸ்வரத்தில் உள்ள வில்லூண்டி தீர்த்தம் அழகிய கண்வரும் கடற்கரையாகும். ராமேஸ்வரத்தில் உள்ள 64 தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. இந்த கடல் மிகவும் அழகிய அமைதியான கடலாக தோற்றமளிக்கும். மேலும், கடலுக்கு அருகில் ஒரு தூய நீர் கிணறும் உள்ளது. இது ராமாயணப் புராணக் கதையுன் கூறப்படுகிறது. ராமேஸ்வரத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் இந்த தீர்த்தம் அமைந்துள்ளது.

News May 4, 2024

மதுரை: சிக்னலில் வெப்பம் தணிக்க பந்தல் அமைப்பு

image

தமிழகம் முழுவதும் கோடை வெயிலால் வெப்ப அலை வீசி வருகிறது. மதுரையில் தொடர்ந்து வெப்பம் 42 டிகிரி செல்சியஸ் ஆக இருந்து வருகிறது. கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்று மதுரை மாநகராட்சி மண்டலம் 3, சேதுபதி மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு வெப்பம் தணிக்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!