Tamilnadu

News June 27, 2024

காத்திருப்பு கூடம் கட்டுமான பணி: ராம்நாடு கலெக்டர் ஆய்வு

image

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ரூ.1.56 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுவரும் மக்கள் நிரந்தர காத்திருப்பு கூடம் கட்டுமான பணியை கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேற்று (ஜூன் 26) ஆய்வு செய்தார். உதவி ஆட்சியர் (பயிற்சி) மொகத் இர்பான், தாசில்தார் சேதுராமன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் மாறன் உடனிருந்தனர்.

News June 27, 2024

கிருஷ்ணகிரி: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் அனைத்திந்திய இளைஞர் மன்றம், இந்திய தேசிய மாதர் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.60-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இ.கம்யூ. நகர செயலாளர் உபேத் தலைமை தாங்கினார்.

News June 27, 2024

சேலையூர்: ரூ.6 லட்சம் திருட்டு

image

சேலையூர் அருகே கோவிலாச்சேரியை சேர்ந்தவர் சேகர். கிணறு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இவர் கிணறு தோண்டும் பணிக்கு சென்று விட்டனர். நேற்று மாலை வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே, சென்று பார்த்த போது வீட்டில் இருந்த ரூ. 6 லட்சம் பணம், 4 சவரன் நகை திருடு போனது. இதுதொடர்பாக சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News June 27, 2024

தருமபுரி: எஸ்பி அலுவலத்தில் 87 மனுக்களுக்கும் தீர்வு

image

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் மனு மீது குறைதீர்க்கும் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 87 மனுக்கள் பெறப்பட்டன, அதில் 87 மனுக்களுக்கும் மீது தீர்வு காணப்பட்டது. மேலும் புதிதாக 36 மனுக்கள் பெறப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த குறைதீர்க்கும் முகாம் தருமபுரி எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்றது.

News June 27, 2024

பாமக டெபாசிட் இழப்பது உறுதி: அமைச்சர் பொன்முடி

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் எழுச்சியை பார்க்கும் போது பாமக டெபாசிட் இழப்பது உறுதியாகிவிட்டது என அமைச்சர் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார். நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், முதல்வர் ஸ்டாலின் பெண்கள் முன்னேற்றத்திற்காக நல்ல பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் என்றும், நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியில் ஆணும் பெண்ணும் சமம் என்றும் தெரிவித்துள்ளார்.

News June 27, 2024

“போதை தனிமனிதனை சீரழித்துவிடும்”

image

புதுச்சேரியில் காவல் துறை சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கடற்கரை சாலையில் நேற்று நடந்தது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில் “போதைப்பொருள்களைப் பயன்படுத்துபவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதுடன், அவர்களது நல்ல சிந்தனையும் அழிகிறது. போதைப்பொருள்களால் நாட்டின் வளா்ச்சியும் பாதிக்கப்படுகிறது. போதைக்கு அடிமையானவர்களுக்கு தங்களது செயல்பாடே தெரிவதில்லை” என்றார்.

News June 27, 2024

தேனி: இந்து எழுச்சி முன்னணி நிர்வாகி மிது வழக்கு

image

தேனியைச் சோ்ந்தவா் ராமராஜ். இவா் இந்து எழுச்சி முன்னணி மாவட்டத் தலைவராக உள்ளாா். இவா் நிலப்பட்டா விவகாரம் தொடா்பாக பெரியகுளம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்றாா். அப்போது, வருவாய்க் கோட்டாட்சியா் முத்துமாதவனுடன் அவா் வாக்குவாதம் செய்து அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராமராஜ் மீது தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News June 27, 2024

கள்ளழகர் கோவிலில் இனி நாள் முழுவதும் அன்னதானம்

image

தமிழகத்தில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 11 கோவில்களில் நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு இத்திட்டம் மதுரை மாவட்டம், அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் நடைமுறைப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் நேற்று சேகர்பாபு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மதுரை மாவட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News June 27, 2024

காஞ்சிபுரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் உத்திரமேரூர், குன்றத்தூர், திருப்பெரும்புதூர் போன்ற முக்கிய நகரங்களில் தண்ணீர் வெள்ளம்போல் தேங்கி , போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே வெளியே செல்பவர்கள் குடை மற்றும் ரெயின்கோட் போன்றவற்றை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 27, 2024

கன்னியாகுமரியில் வெளுத்து வாங்கும் கனமழை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் வெளியே செல்வோர் குடை, ரெயின்கோட் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!