India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் திமுக கூட்டணி 9 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக விஜய வசந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக சார்பில், பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் திமுக கூட்டணி 9 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளராக மாணிக்கம் தாகூர் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் விஜயபிரபாகரன், பாஜக சார்பில், ராதிகாவும் போட்டியிடுகின்றனர்.

பழனியில் பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். நாளை பங்குனி தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தருவர்என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் தேரோட்ட நிகழ்வை காண 4 இடங்களில் எல்.ஈடி.திரை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் எஸ்டிபிஐ கட்சி போட்டியிடுகிறது. இந்த கட்சி சார்பில் முகமது முபாரக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சி பொறுப்பாளர்கள் வருகை தந்திருந்தனர்.

சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமயம் மற்றும் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (23.03.2024) ஆஷா அஜித், மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச்சந்திரன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் NDA கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பாஜக நிர்வாகிகள், பாமக வேட்பாளர் திலக பாமா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்த நிர்வாகிகள், பாஜக மக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெறும் என தெரிவித்தனர்.

பழனிமலைக் கோயிலுக்கு செல்லும் வழியில் குப்பை கிடங்கில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மேலும் அப்பகுதியை சேர்ந்த 32 ஆவது வார்டு கவுன்சிலர் தீனதயாளன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டு விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இதனால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது . இச்சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

வேங்கிக்கால் ஓம் சக்தி நகரில், 2024 மக்களவை தேர்தலையொட்டி வாக்கு சதவீதம் அதிகரிக்கும் நோக்கில் மாற்றுத்திறனாளி வாக்களிக்க ஏதுவாக அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று 12-னு படிவத்தினை இன்று (23.03.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

தேனி மாவட்டம்
போடிநாயக்கனூரில்
யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் போடி தேனி மாவட்ட அமைச்சியூர் கபடி கழகம் இணைந்து மாவட்ட அளவிலான கபடி போட்டி விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு ஆசிரியர் சங்கிலிக்காலை ஜே. ஜே.செல்வின், ரிச்சர்ட் கலந்து கொண்டனர். மேலும் இந்த போட்டியில் பல மாவட்டங்களிலிருந்து வருகை தந்து கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதனை அடுத்து தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தாமாக தலைவர் எஸ் டி ஆர் விஜயசீலன் இன்று கட்சியின் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.